<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	
	xmlns:georss="http://www.georss.org/georss"
	xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#"
	>

<channel>
	<title>விநாயகர் பக்தி பாடல்கள் | Ganesha devotional songs in tamil</title>
	<atom:link href="https://thevaramthiruvasagam.com/blog/category/bhajanai-paadalgal/tamil-god-songs-lyrics/vinayagar-songs-tamil-lyrics/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://thevaramthiruvasagam.com/blog/category/bhajanai-paadalgal/tamil-god-songs-lyrics/vinayagar-songs-tamil-lyrics/</link>
	<description>Tamil Devotional lyrics &#124; Tamil god songs lyrics</description>
	<lastBuildDate>Mon, 08 Apr 2024 10:16:27 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2022/04/cropped-favicon-2.jpg?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>விநாயகர் பக்தி பாடல்கள் | Ganesha devotional songs in tamil</title>
	<link>https://thevaramthiruvasagam.com/blog/category/bhajanai-paadalgal/tamil-god-songs-lyrics/vinayagar-songs-tamil-lyrics/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">205440922</site>	<item>
		<title>Ganapathi Endrida Kalangum Valvinai Lyrics &#124; கணபதி என்றிட கலங்கும் வல்வினை</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/ganapathi-endrida-kalangum-valvinai-lyrics/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/ganapathi-endrida-kalangum-valvinai-lyrics/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Mar 2023 07:18:23 +0000</pubDate>
				<category><![CDATA[பக்தி பாடல்கள்]]></category>
		<category><![CDATA[விநாயகர் பாடல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=1410</guid>

					<description><![CDATA[<p>கணபதி என்றிட கலங்கும் வல்வினை என்ற பஜனை பாடல்களை பாடி உலகிலுள்ள அனைத்து இன்பங்களையும் பெற்று&#160;வாழ வேண்டிக் கொள்கிறோம்&#160; கணபதி என்றிட கலங்கும் வல்வினை&#160;பாடல் வரிகள் கணபதி</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/ganapathi-endrida-kalangum-valvinai-lyrics/">Ganapathi Endrida Kalangum Valvinai Lyrics | கணபதி என்றிட கலங்கும் வல்வினை</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>கணபதி என்றிட கலங்கும் வல்வினை என்ற பஜனை பாடல்களை பாடி உலகிலுள்ள அனைத்து இன்பங்களையும் பெற்று&nbsp;வாழ வேண்டிக் கொள்கிறோம்&nbsp;</p>



<h2 class="wp-block-heading">கணபதி என்றிட கலங்கும் வல்வினை&nbsp;பாடல் வரிகள்</h2>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">கணபதி என்றிட கலங்கும் வல்வினை<br>கணபதி என்றிட காலனும் கைதொழும்</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-red-color">கணபதி என்றிட கருமம் ஆதலால்<br>கணபதி என்றிட கவலை தீருமே</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">காக்கும் கடவுள் கணேசனை நினை<br>காக்கும் கடவுள் கணேசனை நினை</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">கவலைகள் அகல அவன் அருள் துணை</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">காக்கும் கடவுள் கணேசனை நினை<br>கவலைகள் அகல அவன் அருளே துணை<br>காக்கும் கடவுள் கணேசனை நினை</mark></p>



<figure class="wp-block-image size-large is-resized"><img data-recalc-dims="1" fetchpriority="high" decoding="async" src="https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2022/04/ganesh-4419043.jpg?resize=457%2C305&#038;ssl=1" alt="ganesha" class="wp-image-609" width="457" height="305" srcset="https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2022/04/ganesh-4419043-scaled.jpg?resize=1024%2C683&amp;ssl=1 1024w, https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2022/04/ganesh-4419043-scaled.jpg?resize=300%2C200&amp;ssl=1 300w, https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2022/04/ganesh-4419043-scaled.jpg?resize=768%2C512&amp;ssl=1 768w, https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2022/04/ganesh-4419043-scaled.jpg?resize=1536%2C1024&amp;ssl=1 1536w, https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2022/04/ganesh-4419043-scaled.jpg?resize=2048%2C1365&amp;ssl=1 2048w, https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2022/04/ganesh-4419043-scaled.jpg?w=1600&amp;ssl=1 1600w, https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2022/04/ganesh-4419043-scaled.jpg?w=2400&amp;ssl=1 2400w" sizes="(max-width: 457px) 100vw, 457px" /></figure>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்<br>யார்க்கும் எதற்கும் அவனே முதற்பொருள்</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">அன்பெனும் பிடியுள் அகப்படும் கருப்பொருள்<br>ஊட்டும் உலகிற்கும் ஒளி தரும் உறிபொருள்</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள்<br>உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்கார தனிப்பொருள்</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">காக்கும் கடவுள் கணேசனை நினை</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">நாதமும் போதமும் ஞானமும் ஆனவன்<br>நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்<br>நாதமும் போதமும் ஞானமும் ஆனவன்<br>நம்பிக்கை வைப்பவர்கள் நாவிலே தேனவன்<br>ஓம் என்னும் ஒளி அது உருவமாய் வளர்பவன்</mark><br><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">உமையவள் மடியிலே குழந்தையாய் திகழ்பவன்</mark></p>



<p><mark style="background-color:rgba(0, 0, 0, 0)" class="has-inline-color has-vivid-purple-color">காக்கும் கடவுள் கணேசனை நினை<br>கவலைகள் அகல அவன் அருளே துணை<br>காக்கும் கடவுள் கணேசனை நினை</mark> !!!!!</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/ganapathi-endrida-kalangum-valvinai-lyrics/">Ganapathi Endrida Kalangum Valvinai Lyrics | கணபதி என்றிட கலங்கும் வல்வினை</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/ganapathi-endrida-kalangum-valvinai-lyrics/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1410</post-id>	</item>
		<item>
		<title>ஸ்ரீகணேச புஜங்கம் பாடல் வரிகள் &#8211; Sri Ganesa Bhujangam lyrics</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/sriganesa-pujangam/</link>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Apr 2022 09:49:21 +0000</pubDate>
				<category><![CDATA[பக்தி பாடல்கள்]]></category>
		<category><![CDATA[விநாயகர் பாடல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=608</guid>

					<description><![CDATA[<p>ஸ்ரீகணேச புஜங்கம் ஆதிசங்கரரால் பாடப்பட்ட ஸ்ரீ கணேச புஜங்கம் பாடல் மூலம் விநாயகனின் அருள் பெறலாம் விநாயகனை தரிசிக்கும்போது கணேச பூஜை பாடுபவர்களுக்கு அனைத்து நன்மையும் தரும்-&#8220;கணகணவென</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/sriganesa-pujangam/">ஸ்ரீகணேச புஜங்கம் பாடல் வரிகள் &#8211; Sri Ganesa Bhujangam lyrics</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<h2 class="wp-block-heading">ஸ்ரீகணேச புஜங்கம்</h2>



<p>ஆதிசங்கரரால் பாடப்பட்ட ஸ்ரீ கணேச புஜங்கம் பாடல் மூலம் விநாயகனின் அருள் பெறலாம் விநாயகனை தரிசிக்கும்போது கணேச பூஜை பாடுபவர்களுக்கு அனைத்து நன்மையும் தரும்-&#8220;கணகணவென ஒலிசெய்மணி இசை &#8220;.</p>



<h3 class="wp-block-heading">Sri Ganesa Bhujangam lyrics</h3>



<pre class="wp-block-verse">கவினுறு கற்பகக் கணபதி களிப்பவர் 
மனநிறை மதகரி இருசெவி முறமென
மகிழ்வுறு தாண்டவம் ஏற்புற நடிப்பவர் 
பெருவயி றதனிடை அரவினை அணியென
பெருமையில் உரிமையில் அருமையா யணிபவர்
அரனது கணநிரை அதனது தலைமையர்
அருமையர் அரன்மகன் அவரையே துதிக்கின்றேன். 1

ஒலியில்வலிபெறும் தெளிவுறு வீணையின்
ஒலியினை ஒடுக்கிய மலர்முகம் உடையவர்
நவமுடன் சிறிதசை துதிக்கையின் நுனியில்
உளநிறை மாதுளங் கனியினை உடையவர்
புழை செவி வழிகிற மதமழை நறுமணம்
புணர்மகிழ் வண்டினப் பெருந்தொகை உடையவர்
அரனது கணநிரை அதனது தலைமையர்
அருமையர் அரன்மகன் அவரையே துதிக்கின்றேன். 2

இளங்கதிர் செம்மலர் இனைவுறு செம்மணி
துலங்கிய பூந்தளிர் அனைய நல் ஒளியினர்
விளங்கிய ஒருதனி தானெனத் தனித்தவர்
இலங்கிடு பெருவயிறொருபுடை சாய்ந்துபின்
வரம்தரத் தொங்கிட வளை துதிக்கையொடு
திறம்பெறு ஒருகோடுடையவர் கணபதி 
அரனது கணநிரை அதனது தலைமையர்
அருமையர் அரன்மகன் அவரையே துதிக்கின்றேன். 3

பலபல ஒளிபெறு மணிநிறை புனைவுறு
வளமுடை மகுடமும் வளமுடன் அணிபவர்
நலமுடை மௌலியில் மதியதன் கலையினை
அழகென அணியென அழகினுக் கழகெனத்
துலங்கியே பிறவித் தொடர்பினை அழித்திட
விளங்கிய காரண விளைவெனவானவர்
அரனது கணநிரை அதனது தலைமையர்
அருமையர் அரன்மகன் அவரையே துதிக்கின்றேன். 4

உயர்வுறத் தூக்கிய கொடியெனத் திகழ்வுறு
ஒளிர்துதிக் கையதன் ஆதியில் இலகுறும் 
அயர்வறு புருவ அசைவினில் அழகிய
மகிர்வருள் இணைவிழி மல்கிய பெருமையர்
துயரறு தேவதைத் தோகையர் சாமரம்
துணைகொடு வழிபடும் தூயநற் கணபதி
அரனது கணநிரை அதனது தலைமையர்
அருமையர் அரன்மகன் அவரையே துதிக்கின்றேன். 5

பலமுறைதுடிதுடித் தசைவுறும் கண்ணினை
வலமுற சிவந்திடும் வடிவழகுடையவர்
நலமுறு தயைமுதல் மென்மையும் பெருங்குணம்
இலகிய பலவிதப் பிறவிகள் உடையவர்
உறவென அறமென உரியபல்லீலைகள்
புரிபவர் யோகியர் துதி செய்யும் கணபதி
ஓமெனும் ஓங்காரத் துட்பொருள் ஆனவர்
ஏமமாம் சிவகணத் தலைவரைத் துதிக்கின்றேன். 6

ஓங்காரவடிவமே தானெனும் தூயவர்
மாறுபாடற்றவர் முக்குணம்
நீங்கிய ஆனந்த வடிவமே தன்னுரு
நேர்ந்து வேறோரு வற்றவர் யாவரும்
ஏங்கியே அடைந்திடும் சிறப்பிடம் இதுவென
எண்ணிலா வேதமும் தோற்றிய காரணர்
பாங்குடன் தொன்மையும் திறமையும் கொண்டவர்
பண்பாளார் போற்றிடும் அவரையே துதிக்கின்றேன். 7

பேரறிவானந்த அமைதியும் உடையவ!
பேசறு அரன்மகன் ஆன எம் இறைவா!
வீறுகொள் லீலைகள் அளவில புரிபவா!
வேறிலை தானென விளங்கிடும் அரியவ!
நீறென உலகழித் தளித்திடும் கருணையே!
நேர்ந்த இவ்வுலகிதன் ஆணியாம் பெரியவ!
மாறிலா மனதுடன் மதகளி உன்றனை
மனமொழி மெய்கொடு வணங்கினேன்!அருளுக! 8

எங்கனும் நிறைந்தவர் ஈசனின் மகனிவர்
பொங்கிய கருணையர் புகழ்விழை விதனையே
மங்களக் கதிரொளி பரவிடு காலையில்
மனமொழி மெய்களால் துதிப்பவர் எவர்க்கும்
பொங்கிடும் புனலென வாக்கது வாய்க்கும்
புரிந்திடும் வினைவலம் பொலிந்திடும் உண்மை
தங்கியே அருள் தரக் கணபது இருக்கத்
தரணியில் பெறமுடியாததும் உண்டோ!  9

                                                 - ஆதிசங்கரர்</pre>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/sriganesa-pujangam/">ஸ்ரீகணேச புஜங்கம் பாடல் வரிகள் &#8211; Sri Ganesa Bhujangam lyrics</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">608</post-id>	</item>
		<item>
		<title>விநாயகர் துதிகள் &#124; Vinayagar thuthi in Tamil – part 2</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/vinayagar-thuthi-in-tamil-part-2/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/vinayagar-thuthi-in-tamil-part-2/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Apr 2022 09:41:33 +0000</pubDate>
				<category><![CDATA[பக்தி பாடல்கள்]]></category>
		<category><![CDATA[விநாயகர் பாடல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=601</guid>

					<description><![CDATA[<p>மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே கழியவரும் பொருளே, கண்ணே - செழிய கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை அலாலயனே, சூழாதென் அன்பு! மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/vinayagar-thuthi-in-tamil-part-2/">விநாயகர் துதிகள் | Vinayagar thuthi in Tamil – part 2</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<pre class="wp-block-verse">மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!

 

மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்த எண்ணுகின்ற எறும்பன்றே அவரை 
வருத்த எண்ணுகின்ற மலம்!

 

நாரணன் முன் பணிந்தேத்த நின்று எல்லை நடாவிய அத்
தோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே, 
காரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா, 
ஆரண நுண்பொருளே, என்பவர்க்கில்லை அல்லல்களே! 

 மங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா!
பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே!
சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!

 

அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து
எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென
அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே!

 

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

 

இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து

என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!

திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும் 
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே! 
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே! 
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

 

யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!

 

ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை 
முக்கட் கடாயானை முன்!

 

களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!</pre>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/vinayagar-thuthi-in-tamil-part-2/">விநாயகர் துதிகள் | Vinayagar thuthi in Tamil – part 2</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/vinayagar-thuthi-in-tamil-part-2/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">601</post-id>	</item>
		<item>
		<title>விநாயகர் துதிகள் &#124; Vinayagar thuthi in Tamil &#8211; part 1</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/vinayagar-thuthi-in-tamil-part-1/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/vinayagar-thuthi-in-tamil-part-1/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Apr 2022 09:30:39 +0000</pubDate>
				<category><![CDATA[பக்தி பாடல்கள்]]></category>
		<category><![CDATA[விநாயகர் பாடல்கள்]]></category>
		<category><![CDATA[Vinayagar thuthi]]></category>
		<category><![CDATA[விநாயகர் துதி]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=598</guid>

					<description><![CDATA[<p>பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ எனக்கு சங்கத் தமிழ்</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/vinayagar-thuthi-in-tamil-part-1/">விநாயகர் துதிகள் | Vinayagar thuthi in Tamil &#8211; part 1</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p></p>



<pre class="wp-block-verse">பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை 
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!

 

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!


வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள்நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!


பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை 
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!


விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!

</pre>



<p>vinayagar thuthi</p>



<pre class="wp-block-verse">அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்ததொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!

 

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே! 
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே! 
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!


திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

 

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!




அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்.

 

முக்கண் ஒருத்தன் மற்றென்னுள வாரி முயங்குதலான்
மிக்க வெண்கோடொன்று மேசிதையா நிற்கும் வெள்ளறிவை
உக்க கருமத மேகரு மாசை ஒழிக்கும் அருள்
புக்கம் செம்மேனி மனஞ் செம்மையாகப் புணர்த்திடுமே.

 

தலைவாரி கடுக்கைமாலைத் தனிமுதல் சடையிற் சூடும்
குழவி வெண்திங்கள் இற்றகோட்டது குறையென்றெண்ணிப்
புழைநெடுங்கரத்தாற் பற்றிப் பொற்புற இனைந்து நோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்.

 

வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்!
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ புத்தி மிகுந்துவரும்!
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத்தொழ துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே!
அப்பமும் பழம் அமுதும் செய்தருளிய தொப்பையப்பனை தொழ வினையறுமே!

 

தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும் 
கணபதி என்றிடக் கருமமாதலால்
கணபதி என்றிடக் கருமமில்லையே!

 

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுகட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.


அகரமென அறிவாகி உலகம் எங்கும்
அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்
பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப்
போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்
நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!

 

வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத்
திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொல்லுநால்
வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை
யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி
வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.

                                                                                                                                                                                                                                                                              பண்ணியம்,ஏந்தும் கரந்தனைக்காக்கிப்
பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச
வியன்கரம் தந்தைதாய்காக்கி 
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக்
கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச்
சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.</pre>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/vinayagar-thuthi-in-tamil-part-1/">விநாயகர் துதிகள் | Vinayagar thuthi in Tamil &#8211; part 1</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/vinayagar-thuthi-in-tamil-part-1/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">598</post-id>	</item>
		<item>
		<title>விநாயகர் அகவல் &#124; Vinayagar Agaval Lyrics in Tamil </title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/vinayagar-agaval-lyrics-in-tamil/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/vinayagar-agaval-lyrics-in-tamil/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Wed, 20 Apr 2022 09:15:21 +0000</pubDate>
				<category><![CDATA[பக்தி பாடல்கள்]]></category>
		<category><![CDATA[விநாயகர் பாடல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=595</guid>

					<description><![CDATA[<p>விநாயகர் அகவல் சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக்</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/vinayagar-agaval-lyrics-in-tamil/">விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics in Tamil </a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<pre class="wp-block-verse">விநாயகர் அகவல் 

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)

                                          - ஒளவையார் அருளியது</pre>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/vinayagar-agaval-lyrics-in-tamil/">விநாயகர் அகவல் | Vinayagar Agaval Lyrics in Tamil </a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/vinayagar-agaval-lyrics-in-tamil/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">595</post-id>	</item>
	</channel>
</rss>
