13. அரிவாட்டாய நாயனார்

வரலாறு:



         சோழ நாட்டுக் கணமங்கலம் என்னும் ஊரில் தாயனார் என்னும் சிவனடியார் கற்பிற் சிறந்த தம் மனைவியாருடன் இல்லறம் என்னும் நல்லறம் நடத்திவந்தார். அவர் தினந்தோறும் சிவபெருமானுக்கு செந்நெல் அரிசியும் செங்கீரையும் மாவடுவும் படைத்துவந்தார். இவ்வாறு ஒழுகி வரும் நாட்களில் அவர் செல்வம் சுருங்கி வறுமை அடைந்தார். அப்போதும் கூலிக்கு வேலை செய்து அதில் கிடைத்த செந்தெல் அரிசியைச் சிவபெருமானுக்குப் படைத்துத் தாம் கார் அரிசி அன்னம் உண்டுவந்தார்.


nayanargal

        இந்நிலைமையை மாற்றுவதற்காக இறைவன் அவ்வூர் வயல்களிலெல்லாம் செந்நெல்வே விளையும்படித் திருவுளம் கொண்டார். அதனால் அவருக்குக் கூலியாகக் கிடைத்த செந்நெல் முழுவதையும் இறைவனுக்கே படைத்துவிட்டுக் தாம் தம் மனைவியார் சமைத்துக் கொடுத்த கீரை உணவை உண்டு காலங்கழித்து வந்தார். பின்னர் கீரை வகைகளும் குறைந்தன. தாயனார் அப்போதும் விரதத்தைக் கைவிடாமல் நீர் முதலியவைகளை அருந்திப் பசி தீர்ந்தார்.

சிவபெருமான் சோதித்து அருளுதல் :


         ஒரு நாள் தாயனார் செந்தெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் தாங்கிச் சிவாலயத்திற்குப் புறப்பட்டார். அவர் மனைவியார் பஞ்ச கல்வியம் தாங்கிப்பின்னே சென்றார். தாயனார் உணவில்லா இளைப்பாலும், அரிசி முதலியவை தாங்கிச் சென்றதாலும் கால் தன்னாடிக் கீழே விழுந்தார் அவர் பின்னால் சென்ற மனைவியார் அவரைத் தாங்கிக்கொண்டார். ஆயினும் அவர் கையிலிருந்த பொருள்கள் யாவும் தரையில் நிலவெடிப்பில் சிந்தின.

          இந்திகழ்ச்சியால் தாயனார் இனிமேல் கோவிலுக்குப் போவதில் பயனில்லை என்று எண்ணி, அரிவாளை எடுத்துக் கழுத்தில் வைத்து ஊட்டியை அறுத்துக் கொள்ளத் தொடங்கினார். அச்செயல் பிறவித் துன்பமாகிய வேரை அறுப்பதுபோல இருந்தது. அதற்குள் சிவபெருமான், நில வெடிப்பிலிருந்து தம் கையை நீட்டித் தாயனார். கையைப் பிடித்துக்கொண்டு மாவடுவைக் கடிக்கும் "விடேல் விடேல்" என்னும் ஓசையை உண்டாக்கினார். அவ்வோசை கேட்டு தாயனார் மனம் மகிழ்ந்து சிவபெருமானை வணங்கினார். எம்பெருமாள் அவரைச் "சிவலோகத்தில் வாழ்ந்திரு" என்று திருவருள் புரிந்து மறைந்தார். நாயனார் அறிவாளால் தம் ஊட்டியை அரிந்தமையால் அரிவாட்டாய நாயனார் எனப் பெயர் பெற்றார்.


MANICKAVASAGAR

திருவாசகம்


Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download. thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai, Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal, Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.

மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


Click here >>