20. சண்டேசுவர நாயனார்.

வரலாறு:



         திருச்சேய்ஞலூர் என்பது சோழநாட்டைச் சார்ந்த காசிப கோத்திரத்தில் எச்சதத்தின் என்பவருக்கும் பவித்திரை என்பவருக்கும் விசாரசருமர் மகனாக உதித்தார். அவர் இளமையிலேயே சிவபக்தி நிறைந்து வேதம் முதலியன சுற்று வித்தகராக விளங்கினார்.


nayanargal

பசுக்களை மேய்த்தல் :


         ஒரு சமயம் இடையன் ஒருவன் தன்மீது பாயவந்த பசுவினைக் கோலால் அடித்தான். அதுகண்டு விசாரசருமர் மனம் வருந்தி அவனை இனி பசு மேய்க்காமல் இருக்க கட்டளையிட்டார் அல்வூரார் அனுமதி பெற்றுத் தாமே அப்பசுக்களை மேய்த்து வந்தார். விசாரசருமர் பசுக்களிடம் மிகவும் அன்பு பசுக்கனை மேய்த்து வந்தார். பசுக்களும் தம் கன்றுகளை மறந்து விசாரசருமரைவிட்டு நீங்காமல் அன்பு நிறைந்தனவாய் தாமே பால் சொரியலாயின அதனைக் கண்ட விசார சருமர் அந்தப் பாலால் சிவபூசை செய்ய எண்ணி ஓர் ஆத்தி மரத்தின் கீழ் மணணால் சிவலிங்கம் ஒன்றைச் செய்தார். அதனைச் சுற்றித் திருக்கோவிலும் கோபுரமும் மதிலும் மண்ணினாலேயே அமைத்தார்.

சிவபூசை :


         இவர் நல்ல மலர்களைப் பறித்து பசுக்கள் சொரித்த பாலைக்குடங்களில் ஏந்திச் சிவபூசை செய்து வந்தார். இவ்வாறு விசாரசருமர் நடத்தி வந்தும் பசுக்களுக்குரியவர்களுக்குப் பால் குறைவின்றி இருந்தது. இதைக் கண்ட ஒருவன் விசாரசருமர் பாலைக் கறந்து வீணாக மணலில் ஊற்றி விளையாடுகிறார் என்று ஊரில் உள்ளாரிடம் கூறினான். ஊரார் எச்சதத்தனிடம், கூறினர். விசாரசருமரின் தந்தையாகிய எச்சதத்தன் அவர்கள் பேச்சை நம்பவில்லை.

தந்தையின் உதைத்த காலை அவர் துண்டாகுதல் :


         தன் மகன் செயலைத் தானே நேரில் கண்டறிய விரும்பினான். அருகிலிருந்த ஒளிந்து கொண்டிருந்தான். விசாரசருமர் பாற்குடங்களை எடுத்துச் சிவலிங்கத்தைத் திருமஞ்சனம் ஆட்டினார். வழக்கம்போல் தன் மகனாரின் செயலைக் கண்ட எச்சதத்தன் மரத்தினின்று இறங்கி ஆத்திரத்தோடு ஓடிவந்தான் கையிலிருந்த கோலால் விசாரசருமரின் முதுகில் ஓங்கி அடித்தான். வாயில் வந்தவாறு அவரை வைதான் அப்பொழுதும் அவர் எழுந்திராமை கண்டு அவன் அங்கு இருந்த பாற்குடங்களைக் காலினால் இடறிச் சிந்தினான். அதனால் சீற்றம் கொண்ட விசாரசருமர் அருகிலிருந்த. கோலை எடுத்தார். அக்கோல் அவருக்கு மழுப்படையாக மாறி அதனால் தம் தந்தையின் உதைத்த காலை அவர் துண்டாக்கினார். எச்சதத்தன் தரையில் விழுந்து இறந்தான். சொரசருமர் மீண்டும் சிவ பூசையில் ஈடுபட்டார்.

சண்டீசப் பதவியை அளித்தல் :


         விசாரசருமரின் பூசைக்கு மகிழ்ந்து சிவபெருமான் உமா தேவியாரோடு காட்சியளித்தார். அவர் விசாரசருமரைத் தம் திருக்கரங்களால் எடுத்து, “எமக்காக உன் தந்தையின் கால்களை வெட்டிக் கொன்றாய். இனி யாமே உனக்குத் தந்தையானோம்” என்று கூறி அவருக்கு தாம் உண்ட பரிகலம், உடுக்கும் உடை, சூடும் மாலை, அணிகலன்கள் முதலியவற்றைக் கொடுத்துத் திருத்தொண்டர்களுக்கெல்லாம் தலைவராக்கிச் சண்டீசப் பதவியை அளித்தருளினார். தம் சடை முடியிலிருந்த கொன்றை மலர் மாலையை அவருக்குச் சூட்டினார். எச்சதத்தன் சண்டேசுவரரால் தண்டிக்கப்பட்டதால் திருக்கையிலாயத்தை அடையும் பேறு பெற்றான்.


MANICKAVASAGAR

திருவாசகம்


Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download. thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai, Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal, Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.

மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


Click here >>