8. எறிபத்த நாயனார்


வரலாறு:


         அநபாய சோழன் மரபில் தோன்றிய மன்னர்கள் கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். அந்நகரில் தேவரும் போற்றும் பெருமை வாய்ந்த "ஆனிலை" என்னும் திருக்கோயிலில் சிலபெருமானை நீங்காத அன்புடன் எறிபத்த நாயனார் எனும் அடியார் வழிபட்டு வந்தார். அவர் சிவனடியார்க்கு நேரும் துன்பங்களைத் துடைப்பதற்காகக் கையில் மழுவாயுதம் தாங்கி நின்றார். அதனால் அடியார்தம் பகைவர்களைக் கொன்று சைவத்தை வளர்த்து வந்தார்.


nayanargal

சிவகாமியாண்டார் துன்பங்களைத் துடைதல்:


         இவ்வாறிருக்கையில், அத்திருக் கோயிலில் சிவகாமியாண்டார் என்னும் தொண்டர், நாள்தோறும் மலர் பறித்து மாலைகள் தொடுத்துப் பெருமானுக்குச் சாத்திப் பக்தியுடன் பரமனை வழிபட்டு வந்தார். ஒருநாள் வழக்கம்போல் மலர் பறித்துத் திருக்கோயிலுக்கு வந்துகொண்டிருந்தார். அவ்வமயம் புகழ்ச்சோழ மன்னனது பட்டது யானை, நீராடி மதங்கொண்டு தெருவழியே வந்தது. சிவனடியாரைக் கண்ட யானை அவரைத் தொடர்ந்து சென்று, அவர் கூடையைப் பறித்து மலர்களைக் கீழே சிந்தியது. அது கண்ட சிவகாமியாண்டார் யானையைத் தடுக்க முயன்று கீழே விழுந்து, "சிவதா சிவதா” என்று அலறினார். அடியார் கூறிய துயரமொழிகளைக் கேட்ட எறிபத்தர், அவர்க்குத் தீங்கு செய்த யானையின் துதிக்கையைத் தம் மழுவால் வெட்டி வீழ்த்தினார். வெட்டுண்ட யானை கடலெனக் கதறியது. குத்துக் கோல்காரரும், பாகரும் அவரை எதிர்க்கவே அவர்களையும் நாயனார் கொன்றொழித்தார்.


வேந்தனின் பேரன்பு :


         உயிர் தப்பிய பாகரில் சிலர் ஓடிச் சென்று அரண்மனை வாயிற்காவலருக்குச் செய்தியைக் கூற. அவர் நிகழ்ந்ததைப் புகழ்ச் சோழரிடம் முறையிட்டனர். அடங்காச் சினங்கொண்ட அரசன் யானையும் பாகரும் இறந்து கிடந்த இடத்திற்கு விரைந்து வந்தான். அங்குப் பகைவர் எவரையும் காணவில்லை. எறிபத்த நாயனார். இருகை வேழம்போல் தன் ஒரு கையில் மழுவேந்தி நிற்பதைக் கண்டான். சிவக்கோலந் தாங்கிய அவர் அத்தீமையைப் புரிந்திரார் எனக் கருதிய மன்னன், இத்தீவினையைப் புரிந்தவர் யார்? என்று வினவினன் அருகிலிருந்த பாகர் எறிபத்த நாயனாரைக் காட்டினர். அடியாரைக் கண்ட அரசன் யானை தவறு செய்திராவிடில் நாயனார் அதனைக் கொன்றிரார் என்று துணிந்தான். நாயனாரிடம் சென்று "இவ்யானை புரிந்த குற்றத்திற்கு இதனைக் கொன்றதுமட்டும் போதுமோ! அருள வேண்டும்" என்று வேண்டிவன்.
அது கேட்ட எறிபத்த நாயனார் யானையையும், பாகரையும் கொன்ற காரணத்தை அறிவித்தார். அச்சொற்களைக் கேட்டு மன்னன் பேரச்சங்கொண்டு சிவனயடியார்க்கு நேர்ந்த இக்குற்றத்திற்கு தன்னையும் கொல்ல வேண்டுமென்று, தன் உடைவாளை எறிபத்த நாயனாரிடம் நீட்டினான். வேந்தனின் பேரன்பைக் கண்ட எறிபத்தர் அவ்வாளை வாங்கிக்கொள்ளா விட்டால் தானே தன் உயிரை அவன் மாய்த்துக் கொள்ளவும் கூடும் எனக் கருதி அவ்வாளை வாங்கிக்கொண்டனர். மன்னர் நாயனாரைப் பணிந்து தன் பிழை நீங்கத் தன்னைக் கொல்லுமாறு கூறினார். ஆனால் எறிபத்தரோ அவ்வாளால் தம்மையே வெட்டப் புகுந்தார். அது கண்ட அரசன் மனம் பதறி அவர் கையைப் பற்றித் தடுத்தனன். அவ்வமயம், இறைவன் அருளால், "உங்கள் சிவத் தொண்டின் பெருமையை உலகோர் அறியுமாறு செய்யவே மதயானையை மலர்களைச் சிந்துமாறு செய்தோம்" என்ற சொற்கள் வானத்தில் எழுந்தன. இறந்த யானையுடன் பாகரும் உயிர் பெற்றெழுந்தனர்.


MANICKAVASAGAR

திருவாசகம்


Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download. thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai, Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal, Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.

மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


Click here >>