புகார் என்று புகழப் பெறும் காவிரிப்பூம்பட்டினதில் வணிகர் மரபி ஒரு வாழ்ந்து வந்தார். அவர் அடியார்கள் எதைக் கேட்பினும் இல்லை என்று கூறாத இதயம் படைத்தவர். உலக இயல்புக்குப் பகையானதால் அவர் இயற்பகையார் என்று பலராலும் அழைக்கப்பட்டார்.
சிவபெருமான் சோதித்து அருளுதல்:
ஒரு சமயம் சிவபெருமான் அவர் அன்பைச் சோதனை புரிய எண்ணிக் காமுக வேதியர் உருக்கொண்டு வந்தார். அவர் இயற்பகையாரை நோக்கி, "அன்பனே! உன் காதல் மனைவியை எனக்குத் தருக" எனக் கேட்டார். இயற்பகையார், "எனக்குரிய பொருள்களெல்லாம் சிவனடியார்களுக்கே உரியனவாகும்" என்று கூறித் தன் மனையியைத் தடையின்றிக் கொடுத்தார்! வேதியர் அவர் மனைவியை அழைத்துச் செல்லும் வழியில் இயற்பகையாரின் உறவினர்கள் அவரைத் தடுத்து ஆயுதங்களால் தாக்க முயன்றனர். நாயனார் அவர்களையெல்லாம் கொன்று வேதியரைத் திருச்சாய்க்காடு என்னும் தலம்வரை வழியனுப்பினார்.
அவ்வூரையடைத்தவுடன் வேதியர் ஏதோ பயந்தவர் போலத் தொண்டரை நோக்கி, "இயற்பகை முனிவனே! இங்கே வா" என்று சொல்லி ஓலமிட்டார். ஓலமிட்டழைத்த ஓசையைக் கேட்ட இயற்பகையார், "அடியேன் இதோ வந்து விட்டேன். தங்களுக்குத் தன்பம் விளைப்பவர் இன்னும் உளராயின் அவரையும் கொன்று கிறேன்" என்று ஒடி வந்தார். வேதியர் மறைந்தார். சிவபெருமான் உமாதேவியாரோடு வெள்ளைக் காளையின் மீதேறிக் காட்சியளித்தார். இயற்பகையார் தம் மனைவியாருடனும் இறந்த சுற்றத்தினருடனும் வீடுபேற்றை அடைந்தார்.
Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download.
thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai,
Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal,
Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.
மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.