15. மூர்த்தி நாயனார்

வரலாறு:


         பாண்டிய நாட்டிலுள்ள. மதுரையில் வைசியர் குலத்தில் ஓர்த்தி நாயனார் தோன்றினார். இவர் தினந்தோறும் சோமசுந்தரக் கடவுளுக்குச் சந்தனக்காப்பு இடுவதற்குச் சந்தனம் அரைத்துக் கொடுத்துவந்தார். இது நிற்க,"


nayanargal
அரசன் சந்தனக் கட்டைக்கு தடை:

         கருநாடக தேசத்து அரசன் பாண்டியனை வென்று அவன் நாட்டைக் கவர்ந்தான். அவன் சமண சமயத்தைத் தழுவுபவன். அதனால் பாண்டி நாட்டு மக்களையும் சமண சமயத்துக்கு அடங்கி நடக்குமாறு செய்ய எண்ணினான். மூர்த்தி நாயனாரையும் அவ்வழியில் திருப்ப எண்ணி, நாயனார் சந்தனக் கட்டைகள் வாங்கும் கடைகளில் சந்தனக் கட்டை கொடுத்காதிருக்குமாறு கட்டளையிட்டான். அதனால் மூர்த்தி நாயனார் மிகவும் துன்பப்பட்டார்.


கையையே சந்தன கல்லில் தேய்த்தல்:


         சந்தனக் கட்டை எங்கும் கிடைக்காமையால் அவர் ஆலயத்திற்குச் சென்று இறைவனாரை வணங்கி, "அண்ணலே, தாங்கள் அணிதற்கு வேண்டிய சந்தனக் கட்டைக்கு முட்டு வந்தாலும், அதனைத் தேய்க்கும் எனது கைக்கு முட்டு இல்லை" என்று கூறி ஒரு சந்தனக்கல்லில் தமது முழங்கையை வைத்து, எலும்பினுள் இருக்கும் துவாரம் திறந்து இரத்தம்ஒழுகும் வரையில் உறைத்தார். அவ்வளவில் சிவபிரான் காட்சி தந்து அன்பனே, நீ இவ்வாறு செய்தல் வேண்டாம். உனக்குத் துன்பம் விளைவித்தவன் விரைவில் இறப்பான். நீயே இந்த நாட்டின் அரசனாக இருந்து சைவ சமயத்தை வளர்த்து முடிவில் நம் உலகை அடைவாயாக என்று கூறியருளினார். அந்நிலையில் சந்தனம் உறைத்த கை வளர்ந்தது. மறுநாள் மன்னனும் மாண்டான் அமைச்சர்கள் அவனுக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கடன்களையெல்லாம் செய்து முடித்தனர். அரசனுக்கு மைந்தன் இல்லாமையால் நல்ல அரசனைத் தேர்ந்தெடுப்பதற்காக அவர்கள் பட்டத்து யானையின் கண்ணைக் கட்டி ஏவினர். அந்த யானையோ சொக்கநாதன் சந்தியில் இருந்த மூர்த்தி நாயனாரைத் தேர்ந்தெடுத்துத் தன் முடிமீது வைத்துக் கொண்டது. எனவே மூர்த்தி நாயனார் மதுரையின் அரசரானார். அவரது ஆணைப்படியே அமைச்சர்கள் விபூதி, உருத்திராட்சம் முதலியவற்றையே அவரது திருமுடியில் அணிவித்தனர். இவ்வாறு மூர்த்தி நாயனார் நெடுங்காலம் அரசாண்டு முழு அடைந்தார்.


MANICKAVASAGAR

திருவாசகம்


Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download. thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai, Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal, Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.

மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


Click here >>