27.நமிநந்தியடிகள் நாயனார்

வரலாறு:

         இவர் சோழ நாட்டிலுள்ள ஏமப்பேறூரில் தோன்றினார். இவர் அந்தணர். சிவத்தொண்டிலும் சிவனடியார் தொண்டிலும் வழுவாது வாழ்ந்தவர். நமிநந்தியடிகள் திருவாரூரில் கோவில் கொண்டிருக்கும் வன்மீகநதரை வழிபட்டு அளவில்லா விளக்குகள் வைக்க எண்ணினார்.


nayanargal

குளத்து நீரையே எண்ணெய்யாகல்  :


         மாலைக்காலம் நெருங்கியவுடன் அருகிலுள்ள சமணர் வீடுகளில் சென்று சிவபெருமானுக்கு விளக்கு எரிக்க எண்ணெய் வேண்டுமெனக் கேட்டார். அவர்கள், உங்கள் கடவுளின் கையில் நெருப்பு இருக்கும்போது விளக்கு எதற்கு?. என்று கேட்டனர். அவர்கள் பேச்சைக் கேட்டு மனம் உடைந்த நாயனார் சிவபெருமானிடம் முறையிட்டார். அப்போது குளத்து நீரையே கொண்டு விளக்கு எண்ணெய்யாக என்று சிவபெருமான் அசரீரியாக மொழிந்தார். அடியவர் அவ்வாறே செய்து, பொழுது விடியுமளவும் விளக்கு எரித்து வந்தார்.


         திருவாரூரில் குடிபுகுந்தல் :


         ஒரு சமவம் திருவாரூரில் வீதிவிடங்கப் பெருமான் திருவிழாவைக் கண்டு மகிழ்ந்து, பலரைத் தொட்டதால் தீட்டு உண்டாயிற்று என்று எண்ணி, அவர் மனைவியார் அழைத்தும் வீட்டினுள் செல்லாமல் வெளியிலேயே இருந்தார். அதற்குள் கடவுள் திருவருளால் அவருக்குத் தூக்கம் உண்டாயிற்று. அயர்ந்து தூங்கும்போது அவர் கனவில் சிவபெருமான் தோன்றித் திருவாரூரில் பிறந்தவர்கள் அனைவரும் சிவகணங்களே. அதை நீ காண்பாய் என்று கூறி மறைந்தார்.நாயனார் விழித்தெழுந்து தாம் நிளைத்தது குற்றம் என்று அறிந்து, திருவாரூருக்குச் சென்று அவ்வூரில் பிறந்தவர்களை எல்லாம் சிவகணங்களாகக் கண்டு வணங்கி, பின்னர் தம் குடும்பத்துடன் அவர் திருவாரூரில் குடிபுகுந்து சிவப்பணி செய்து முத்தி அடைந்தார்.


MANICKAVASAGAR

திருவாசகம்


Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download. thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai, Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal, Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.

மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


Click here >>