65. பூசலார் நாயனார்

வரலாறு:


         தொண்டை நாட்டிலே திருநின்றவூரில் அந்தணர் குலத்தில் பூசவார் நாயனார் என்பவர் அவதரித்தார். அவர் சிவபெருமானுடைய நாமத்தையே எப்போதும் சபித்தவண்ணம் இருப்பார். சிவத்தொண்டே தொண்டுகளிலெல்லாம் சிறந்த தொண்டு என்ற உயர்ந்த கொள்கையினை உடையவராய்ச் சிவனடியார்களை ஆதரித்து வந்தார் பூசலார்.

          


nayanargal

         ஒரு சமயம் அவர் சிவபெருமானுக்குக் கோயில் கட்டக் கருதினார். ஆயினும் பணம் இல்லாமையால் மிகவும் வருந்தித் தம் மனத்தினாலேயே கோயி கட்ட நிச்சயம் செய்து, அதற்கேற்ற பொருள்களைத் தேட ஆரம்பித்தார். கோயிலையும் சிறப்பாகத் தம் மனத்தே கட்டியும் முடித்தார். எனவே, சிவபெருமானை வணங்கவும், அவரைத் தம் மனக் கோயிலில் எழுந்தருளவும் ஒரு நல்ல நாளைக் குறித்தார். அக்காலத்திலே காஞ்சிபுரத்தை ஆண்ட காடவ மன்னன் ஒரு பெரிய கோயிலைக் கட்டுவித்துச் சிவபெருமான் ஆலயத்தே எழுந்தருளுவதற்கும் ஒரு நல்ல நாளைக் குறிப்பிட்டான். அந்நாளைக்கு முதல் நாள் சிவபெருமான் அக்காடவன் கனவிலே தோன்றி, 'அன்பனே. நாம் நாளை பூசலாரது ஆலயத்திற்குப் போகப்போகிறோம். ஆதலால் நீ கருதிய இக்கும்பாபிடேகத்தை நாளைக்குச் செய்யாமல் வேறொரு நானில் செய்க்" என்று சொல்லி மறைந்தார். என்னே வியப்பு! மனத்தில் ஒரு கோயில் கட்டுவதோ அதை ஈசனார் ஏற்பதோ! இதனால் வியப்படைந்த மன்னன் அப்பூசலாரைக் கண்டு தொழுதல் வேண்டும் என்ற விருப்புடன் திருநின்றவூரை அடைந்தான். அங்கிருந்த முதியோர்களைக் கண்டு இங்குப் பூசலார் கட்டிய கோயில் எங்குள்ளது? என்று வினவ அதற்கு அவர்கள் இங்குப் பூசலார் கட்டிய கோயில் ஒன்றும் இல்லை என்ற சொல்ல! மன்னன் சில பெரியோர்களை அழைத்துக்கொண்டு தானே அவரைக் காணச் சென்றான். பூசலாரைக் கண்டதும் காடவன் சிவபெருமான் தன் கனவில் கூறியதையும் எடுத்துச் சொல்லிக் கோயிலைக் காட்டும்படி வேண்டினான். பூசலார் சிவபெருமான் தம்மிடம் கொண்டுள்ள அன்பை எண்ணி மகிழ்ந்து தாம் மனத்தே கட்டிய கோயிலின் சிறப்பைத் தெரிவித்தார். இதைக் கேட்ட மன்னன் அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணக்கம் தெரிவித்துதன். பின்னர் பூசலார் நல்ல நாளில் சிவபெருமானைத் தம் மனத்தே எழுப்பிய ஆலயத்தில் பிரதிட்டை செய்தார். அவர் நெடுங்காலம் வாழ்ந்து பின் சிவபெருமான் திருவடியை அடைந்தார்.


MANICKAVASAGAR

திருவாசகம்


Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download. thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai, Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal, Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.

மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


Click here >>