37. கழறிற்றறிவார் நாயனார்

வரலாறு:


         இவர் சேர நாட்டில் மகோதை என்னும் நகரத்தை ஆண்டு வந்த சேரமன்னர். இவருக்குச் சேரமான் பெருமாள் நாயனார் என்னும்
வேறு பெயரும் உண்டு. இறைவன் திருவருளால் எல்லா உயிர்களும் பேசுவதை அறியும் தன்மை பெற்றிருந்ததால் இவரைக் கழறிற்றறிவார் என்று அழைத்தார்கள்.


nayanargal

         ஒருநாள் இவர் யானைமீது பவனி செல்கையில், வண்ணான் ஒருவன் தன் தலையில் தாங்கிய உழமண் மழைநீரால் கரையப் பெற்று உடம்பெல்லாம் திருநீறு பூசியவன்போல் இருந்தான். அவன் சிவவேடத்தினை நினைவூட்டியதாகக் கருதி அவனை வணங்கிச் சென்றார்.


         நடராசப்பெருமானின் சிலம்பொலி கேடல் :


         சேரமான் பெருமான் தினந்தோறும் பூசை வேளையில் நடராசப்பெருமானின் சிலம்பொலி கேட்பது வழக்கம், ஒரு நாள் அவர் சிவபெருமானிடமிருந்து திருமுகம் கொணர்ந்த பாணபத்திரர் என்பவர்க்கு வேண்டிய பொருள்களை அளித்தனுப்பினார். மற்றொரு சமயம், சிவபெருமான் வன்றொண்டர் பாடலைக் கேட்டு இன்புற்றிருந்ததால் சேரமான் பெருமாள் வழக்கம்போல் சிலம் போசை கேளாமல் காலந்தாழ்த்திக் கேட்டுத் திகைத்தார். பின்னர் சிவபெருமானால் செய்தியறிந்து தில்லை சென்று சுந்தர மூர்த்தியை வணங்கிப் பொன் வண்ணத்தந்தாதி பாடினார். பின்னர் திருவாரூர் சென்று திருவாரூர் மும்மணிக்கோவை பாடித்துதித்தார்.


திருக்கயிலைக்குப் புறப்படல் :


         அவர் சுந்தரருடன் பல தலங்களுக்கும் சென்று இறைவனை வழிபட்டார். சுந்தரர் ஒரு சமயம் திருவஞ்சைக்களத்துச் சிவபெருமாளை வழிபட்டார். இறைவன் கட்டளைப்படி வெள்ளை யானையின் மீது ஏறிச் சிவகணங்கள் எதிர்கொள்ளத் திருக்கயிலைக்குப் புறப்பட்டார். போகும்போது சேரமான் பெருமாளின் நினைவாகவே சென்றார். சேரமான் இதனை யோகத்தால் உணர்ந்தார். உடனே அவர் ஒரு குதிரையின் மீது ஏறித் திருவைந்தெழுத்தை ஓதினார். குதிரை விரைவாகப் பறந்துசென்றது. ஆனால் அது நந்தி தேவரால் தடைப்பட்டு நின்றது. அப்போது சேரமான் பெருமானாள் “திரு ஆதிவுலா" என்னும் நூல் இயற்றப்பட்டது. அவர் சிவபெருமான் திருவருளால் சிவகணங்களுள் ஒருவராளார்.


MANICKAVASAGAR

திருவாசகம்


Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download. thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai, Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal, Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.

மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


Click here >>