2. திருநீலகண்ட நாயனார்


வரலாறு:


         சிதம்பரத்தில் குயவர் குலத்தில் அவதரித்தார். திருநீலகண்டர் சிவனடியார்களுக்குச் திருவோடு அளிக்கும் திருப்பணியில் ஈடுபட்டு இருந்தார். அவர் ஒருநாள் சிற்றின்ப விருப்பம் உடையவராய் ஒரு பரத்தையர் வீடு சென்று வந்தார். அதனை அறிந்த அவர் மனைவி, “தீர் எம்மைத் தீண்டுவீராயின் திருநீலகண்டம்" என்று ஆணையிட்டுக் கூறினார். அன்று முதல் பிறர் அறியாமல் இருவரும் தனித்த இல்வாழ்க்கை நடத்தினர். இளமை கடந்து முதுமை அடைந்தனர். ஆயினும், இருவரும் அடியார் பணியில் சிறிதும் குறையாமல் வாழ்ந்துவந்தனர்.


தில்லைவாழ் அந்தணர்

சிவபெருமான் சோதித்து அருளுதல்:


         திருநீலகண்டரது ஒழுக்கத்தின் மேன்மையை உலகறியச் செய்ய சிவபெருமான் ஒரு சிவயோகி வடிவத்தில் தோன்றினார். ஒரு திருவோட்டினை அவரிடத்தில் கொடுத்துத் "தாம் மீண்டும் கேட்கும்போது அதனைக் கொடுக்கவேண்டும்" என்று கட்டளையிட்டுச் சென்றார். சிவபெருமான் மாயையால் அத்திருவோடு மறைந்தது.
சிவயோகியார் பல நாட்கள் கழித்து மீண்டும் நாயனாரிடம் வந்து தமது திருவோட்டைக் கேட்டார். தாயனார் ஓட்டினை வைத்த இடத்தில் சென்று பார்த்தார். அங்கு அதனைக் காணாமையால் சிவயோகியாரை வந்து வணங்கி ஓடு காணாமல்போன செய்தியைக் கூறிப் புதிய ஒடு ஒன்று தருவதாகச் சொன்னார். சிவயோகியார் கோபம் கொண்டு, என் மண் ஓட்டினைத் தவிர வேறு பொன் ஓட்டினைக் கொடுத்தாலும் நான் வாங்கமாட்டேன். நீயே அந்த ஓட்டைத் திருடி இருக்கிறாய்.

           நீ அதனை களவு செய்யவில்லையாயின் உனது ஆசைக்குரிய மகனைப் பிடித்துக்கொண்டு குளத்தில் மூழ்கிக் கூறுக என்றார். திருநீலகண்டர், "ஐயனே, எனக்கு மகன் இல்லையே! என் செய்வேன்" என்றார். அதனைக் கேட்ட சிவயோகியார், "அப்படியாயின் நீ உன் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு குளத்திலே மூழ்கி ஓட்டினைத் திருடவில்லை என்று சத்தியம் செய்"என்றார் அவ்வாறே உடன்பட்டு இருவரும் மூங்கிலின் முனைகளைப் பிடித்துக்கொண்டு திருக்குளத்தில் மூழ்கி எழுந்தனர். மூழ்கியெழுந்த அளவில் இருவரும் முதுமைப் பருவம் நீங்கி இளமைப் பருவம் பெற்றனர். சிவயோகியாராக வந்த சிவபெரும மறைந்து உமாதேவியாரோடு காட்சியளித்து அவ்விருவரையும் நோக்கி "நீங்கள் இருவரும் பெற்ற இந்த இளமைப் பருவம் என்னும் நீங்காதவாறு எம்மிடத்தில் இருப்பீர்களாக" என்று திருவாது மலர்ந்து மறைந்தார் அவ்வாறே இருவரும் சிவலோகம் அடைத்து பேரின்பப் பெருவாழ்வை எய்தினர்.


MANICKAVASAGAR

திருவாசகம்


Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download. thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai, Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal, Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.

மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


Click here >>