59. பரமனையே பாடுவார்

வரலாறு:


         இவர்கள் தமிழும் வடமொழியும் கற்றவர்கள், இவர்கள் என்று சிவபெருமானையே பொருளாகக் கொண்டு இயல் இசை பாடியவர்களாதலின் பரமனையே பாடுவார் அழைக்கப்பட்டனர்.



60. சித்தத்தைச்சிவன்பாலே வைத்தார்

வரலாறு:


         இவர்கள் சிவயோக நெறியில் சித்தத்தை வைத்துப் பெருமானுடைய திருவடித் தொண்டின் வழியில் நின்று முத்தியடைத்தனர். அதனால் இவர்கள் இப்பெயர் பெற்றார்கள்.



61. திருவாரூர்ப் பிறந்தார்

வரலாறு:


         மிகுந்த சிறப்பினை உடைய திருவாரூரில் பிறந்தவர்கள் திருக்கயிலாயத்தில் உள்ள சிவகணங்களே ஆவர். இவர்கள் ஐம்பொறி அடக்கம் வாய்ந்தவர்கள்.



62. முப்போதும் திருமேணி தீண்டுவார்

வரலாறு:


         சிவாகம முறைப்படி இவர்கள் இறைவளைக் காலை, நண்பகல்,மாலை என்னும் மூன்று காலத்திலும் அர்ச்சிப்பார்கள். இவர்கள் அதிசைவர்கள் ஆவர்.



63. முழுநீறு பூசிய முனிவர்

வரலாறு:


         இவர்கள் கற்பம், அதுகற்பம், உபகற்பம் என்னும் மூவகை விபூதிகளில் ஏதேனும் ஒன்றை உடல் முழுவதும் பூசுவர். இவர்கள் சாதி ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் : மும்மலம் அறுத்தவர்கள் தத்துவ நெறி உணர்த்தவர்கள்.



64.அப்பாலும் அடிச்சார்ந்தார்

வரலாறு:


         சேர சோழ பாண்டிய நாடுகளுக்கு அப்பால் உள்ள நாடுகளில் அவதரித்துச் சிவபெருமான் திருவடியை அடைந்த அடியார்களும், தனியடியார்களுக்கு முன்னும் பின்னும் சிவபெருமான் திருவடியை அடைந்தவர்களும் அப்பாலும் அடிச்சார்ந்தார் ஆவர்.


MANICKAVASAGAR

திருவாசகம்


Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download. thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai, Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal, Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.

மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


Click here >>