9. ஏனாதி நாத நாயனார்

வரலாறு:


         சோழ நாட்டில் எயினனூர் தலத்தில் ஈழக்குலச் சான்றோர் குலத்தில் ஏனாதிநாத நாயனார் தோன்றினார். அவர் அரசர்க்கு வாட்படை பயிற்றி அதனால் வரும் பொருளைக் கொண்டு சிவனடியார்களை ஆதரித்துவந்தார்.


nayanargal

திருவெண்ணீற்றின் பொலிபு :


         ஏனாதி நாதருக்குத் தொழில் முறையில் அதிசூரன் என்பவன் தீங்கிழைத்து வந்தான். அவன் ஏனாதிநாதரிடம் பகைமை பூண்டு அவரைப் போரில் வெல்வது அரிது என்று உணர்ந்து வஞ்சனையால் வெல்ல வேண்டுமென்று எண்ணினான். அவன் அவருடன் சண்டை செய்யப் புறப்பட்டான் நெற்றியில் திருநீறு அணிந்து அதனைக் கையிலுள்ள கேடயத்தால் மறைத்துக் கொண்டு நாயனாருக்கு முன்னே நின்றான். இருவரும் போரிடத் தொடங்கினர். நாயனார் அதிசூரனைக் கொல்லும் சமயத்தில் அவன் தன் நெற்றியை மறைத்துக்கொண்டிருந்த கேடயத்தைப் புறத்தே எடுத்தான். திருவெண்ணீற்றின் பொலிவைக் கண்ட நாயனார் திடுக்கிட்டு, 'ஆ' கெட்டேன். இதற்கு முன் ஒரு பொழுதும் இவர் நெற்றியில் காணாத திருவெண்ணீற்றின் பொலிவை இப்போது கண்டேன் இனி வேறு என்ன வேண்டும்? இவர் சிவபெருமானின் அடியாரே! இனி அடியேன் இவர்தம் கருத்தின் வழியே நிற்பேன்" என்று கேடயத்தையும் வாளையும் கீழே போடக் கருதினார். "நிராயுதரைக் கொன்றார் என்னும் பழி இவருக்குஉண்டாகாது இருக்கவேண்டும்” என்று எண்ணி வாளையும் கேடயத்தையும் தாங்கி எதிர்த்துப் போர் செய்பவரைப்போல் அதிசூரன் முன்னே நின்றார். அதிசூரன் உடனே தன் கருத்தை நிறைவேற்றிக்கொண்டான். சிவபெருமான் ஏனாதிநாதரின் பேரன்பைப் பாராட்டி, அவர் தம்மைப் பிரியாதிருக்கும் பெருவாழ்வை அளித்தார்.


MANICKAVASAGAR

திருவாசகம்


Manikkavasagar thiruvasagam Tamil Devotional songs about hindu God Siva by Manikkavasagar. Thiruvasagam to Learn in tamil. Thiruvasagam lyrics download. thiruvasagam pdf download. content is Siva Puranam, Aananthathu Azhundhal, Aasaipathu, Aathumasuti, Achapathu, Achopathigam, Addaikalapathu, Adhisayapathu, Anantha Maalai, Anantha Paravasam, Ananthaatheetham, Annaipathu, Anuboga Suthi, Ariuruthal, Arputhapathu, Arutpathu, Chennepathu, Ennapathigam, Kaaruneyathu Irangal, Kaimaru Koduthal, Kanda Pathu, Keerthi Thiruagaval, Kovil Moothathirupathigam, Kovil Thirupathigam, Kulaapathu.

மாணிக்கவாசகர் திருவாசகம் பற்றிய தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


Click here >>