அட்சய திருதியை பற்றிய தகவல்கள்
அட்சய திருதியை
உத்தராயனா காலத்தில் தமிழ் வருடத்தின் துவக்க மாதமான சித்திரை மாதத்தில் அமாவாசை அடுத்து வளர்பிறை திருதியை திதி தினத்தை அட்சய திருதியை என்கிறோம். சித்திரை மாதத்தில் அக்ஷ்ய திருதியை தினத்தில் நம் குடும்பத்திற்கு தேவையான பொன், ஆபரணங்கள், ஆடைகள் வாங்கினால் அந்தாண்டு முழுவதும் குறைவில்லா பொன், பொருள் நம்மை வந்து சேரும் என்பது நம்பிக்கை.
அட்சய திருதியை சிறப்பு
“க்ஷதம்” என்றால் குறை உடையது ‘அக்ஷதம்” என்றால் குறைவு இல்லாதது, நிறைவு உடையது. பூரணத்வம் உடையது என்று பொருள், குறைவு இல்லாத பூரணாத்வம் பெற்று வாழ வாழ்த்துவதற்கு பயன்படுத்தும் அரிசி மஞ்சள் இந்த மங்கல பொருட்களை அக்ஷதை என்கிறோம்.