<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	
	xmlns:georss="http://www.georss.org/georss"
	xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#"
	>

<channel>
	<title>முக்கிய விரதங்கள் | Mukkiya Viratha Natkal</title>
	<atom:link href="https://thevaramthiruvasagam.com/blog/category/virathangal-mukkiya-viratha-natkal/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://thevaramthiruvasagam.com/blog/category/virathangal-mukkiya-viratha-natkal/</link>
	<description>Tamil Devotional lyrics &#124; Tamil god songs lyrics</description>
	<lastBuildDate>Mon, 08 Apr 2024 10:24:08 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/thevaramthiruvasagam.com/blog/wp-content/uploads/2022/04/cropped-favicon-2.jpg?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>முக்கிய விரதங்கள் | Mukkiya Viratha Natkal</title>
	<link>https://thevaramthiruvasagam.com/blog/category/virathangal-mukkiya-viratha-natkal/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">205440922</site>	<item>
		<title>வெள்ளிக்கிழமை விரதம் &#8211; Vellikizhamai Viratham in Tamil</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/vellikizhamai-viratham/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/vellikizhamai-viratham/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Oct 2022 15:17:05 +0000</pubDate>
				<category><![CDATA[விரதங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=988</guid>

					<description><![CDATA[<p>Vellikizhamai Viratham</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/vellikizhamai-viratham/">வெள்ளிக்கிழமை விரதம் &#8211; Vellikizhamai Viratham in Tamil</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<h3 class="wp-block-heading">வெள்ளிக்கிழமை விரதம்<br></h3>



<h3 class="wp-block-heading">சக்திக்கு வெள்ளிக்கிழமை விரதம்<br></h3>



<p>அம்மனுக்கு உரிய விரத நாள் வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் சக்தி வழிபாடு காலம் காலமாக இருந்து வருகிறது. குறிப்பாக சக்தி விரதம் வெள்ளிக்கிழமைகளில் பெண்களே இருக்கின்றனர். வெள்ளிக்கிழமை விரதம் இருக்கும் கன்னிப் பெண்களுக்கு நல்ல வரனும் சௌபாக்கியமும், திருமணம் ஆன பெண்களுக்கு அவர்கள் அணிந்து இருக்கும் திருமாங்கல்யத்தின் ஆயுட்காலம் பெருகும், செல்வ செழிப்பும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டிடும். அன்றைய தினம் விரதம் இருப்போர் குத்துவிளக்கு ஏற்றி பூஜை செய்து லலிதா சஹஸ்ரநாமம் பராயணம் செய்தால் நாம் வேண்டிய வரம் கிடைக்கும். தட்சணாயனம், உத்தராயனம் என்றும் இவ்விரு அயனங்களுமே புண்ணிய காலம் ஆகும். இவ்விரு மாதங்களிலும் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்மனுக்கு மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது. இம்முறையை பற்றி இவ்விரு மாதங்களில் வரும் அமாவாசை, கிருத்திகை மிகவும் விசேஷம்<br></p>



<h4 class="wp-block-heading">முருகனுக்கு வெள்ளிக்கிழமை விரதம்<br></h4>



<p>உடையதாக கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமை விரதம் முருகனுக்கும் உரிய நாளாக கருதப்படுகிறது.</p>



<pre class="wp-block-preformatted">"வெள்ளிநாள் விரதந்தானே விண்ணவர் உலகைக் காத்த<br>வள்ளல்தன் விரதமாகும். மற்றது புரிந்த மேலோர்<br>உள்ளமேல் நினைந்து மெல்லாம் ஒல்லையின் முடியுமன்றே"</pre>



<p>என்று கந்தபுராணம் உயர்வாகச் சொல்கிறது. </p>



<h4 class="wp-block-heading">விநாயகர்கு வெள்ளிக்கிழமை விரதம்</h4>



<p>சதுர்த்தி விரதம் மட்டுமல்லாது விநாயகர் பெருமானுக்கு வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருப்பது பழக்கத்தில் இருந்து வருகின்றது.</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/vellikizhamai-viratham/">வெள்ளிக்கிழமை விரதம் &#8211; Vellikizhamai Viratham in Tamil</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/vellikizhamai-viratham/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">988</post-id>	</item>
		<item>
		<title>வரலட்சுமி நோன்பு பூஜை &#124; varalakshmi nombu in tamil</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/varalakshmi-nombu/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/varalakshmi-nombu/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Oct 2022 15:10:58 +0000</pubDate>
				<category><![CDATA[விரதங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=990</guid>

					<description><![CDATA[<p>வரலட்சுமி நோன்பு மகாலட்சுமி பாற்கடலில் தோன்றிய நாள்தான் வரலட்சுமி நோன்பாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையில் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். ஒவ்வொரு மணமான</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/varalakshmi-nombu/">வரலட்சுமி நோன்பு பூஜை | varalakshmi nombu in tamil</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<h3 class="wp-block-heading">வரலட்சுமி நோன்பு</h3>



<p>மகாலட்சுமி பாற்கடலில் தோன்றிய நாள்தான் வரலட்சுமி நோன்பாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையில் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். ஒவ்வொரு மணமான பெண்ணும் அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. குடும்ப நலனுக்கு முக்கியமாக செய்ய வேண்டும். இதைச் செய்தால் சுமங்கலித்துவம் வரும் என்பர். கன்னிப் பெண்கள் செய்தால் குடும்ப வாழ்க்கை நன்றாக அமையும் என்பார்கள். வரத்தை கொடுப்பவள் வரலட்சுமி. இந்நோன்பை அனுஷ்டித்தவர்கள் அடைந்த பாக்கியங்களைப் பற்றி பத்ம புராணத்தில் கூறி உள்ளது. இதை அனுஷ்டிக்காத ராணி ஏழையானாள். அனுஷ்டித்தவன் சக்ரவர்த்தினி ஆனான் என்று ஒரு கதையில் இருக்கிறது.</p>



<h3 class="wp-block-heading">வரலட்சுமி நோன்பு பூஜை செய்யும் முறை <br></h3>



<p>பூஜை செய்யும் இடத்தை வெள்ளை அடித்து, அவரவர்கள் வீட்டு வழக்கப்படி, அம்மன் கலசத்தை தாமிரச் செம்பிலோ வெள்ளிச் செம்பிலோ வைக்கலாம். கலசம் வைப்பதற்கென்று சில வீடுகளில் மண்டபம் தனியாகச் செய்து வைத்திருப்பார்கள். செம்பின் கழுத்தில், கருகமணி, முத்து பவழ மாலைகளைப் போடலாம். கலச செம்பின் கீழே ஒரு கிண்ணத்தில் (பேலா) சிறிது அரிசியைப் போட்டு அதன் மேல் அக்கலச செம்பை வைத்து அதற்குப் பாவாடையோ, புடவையோ அழகாக அணிவிக்க வேண்டும்.<br>தேங்காயின்மேல் பிச்சோலை கருகமணி (காதோலை கருகமணி) யையும் (கடையில் கிடைக்கும்) புதிய ரவிக்கைத் துணியை மாலை போல் அணிவிக்க வேண்டும்.கலசத்தை, மாக்கோலம், செம்மண் இட்ட ஒரு பலகையில் ஒரு தலைவாழை இலையைப்<br>.போட்டு அதன் நுனிப்பாகம் வடக்குப்புறமாக வைத்து, அதில் சிறிது அரிசியைப் பரப்பிஅதன் மேல் செம்பை வைக்க வேண்டும். அம்மனை கிழக்கு முகமாக பார்க்கும்படி வைத்து நாம் வலது பக்கம் உட்கார்ந்தபடி பூஜை செய்ய வேண்டும். நோன்பு, சரட்டில் ஒன்பது முடிகள் இட்டு நடுவில் சிறிது புஷ்பத்தைத் தொடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.</p>



<p>வாயிற்படியின் அருகில் ஒரு சிறிய மாக்கோலம் போட்டு செம்மண் இட்டு, அங்கு அம்மனை வைந்து முதலில் பிள்ளையார் பூஜை செய்த பின் மண்டபத்திற்கு பாட்டுப்பாடி அம்மனை அழைத்துவர வேண்டும். லக்ஷ்மி என் வீட்டிற்கு வரவேண்டும் என்று கூறி அழைத்து வரவேண்டும்.</p>



<p>சில வீடுகளில் புதிதாக கல்யாணம் ஆனவர்கள் முதல் வருஷம் தலை நோன்பு என்று கொண்டாடுவார்கள். அம்மனை அழைத்து வந்து, நாமே பூஜை செய்யலாம். அல்லது சாஸ்திரிகளைக் கொண்டும் பூஜை செய்வித்துக் கொள்ளலாம், சௌகரியம் இல்லாதவர்கள் பூஜை புத்தகத்தை வைத்துக் கொண்டு பூஜையைச் செய்யலாம்.</p>



<p>பூஜை முடிந்தபின் சரட்டை வலது கையில் கட்டிக்கொண்டு அம்மனுக்கு நமஸ்காரம் செய்ய வேண்டும். அன்று மாலை அம்மனுக்கு பிரீதியாக ஆரத்தி கரைத்து வைத்து, தீபம் ஏற்றிய உடன், சில சுமங்கலிகளுக்கு வெற்றிலைப் பாக்கு தாம்பூலம் கொடுக்க வேண்டும். அடுத்த நாள் காலை புனர்பூஜை செய்ய வேண்டும். புனர்பூஜை மந்திரங்கள் பூஜை புஸ்தகத்தில் இருக்கும். நைவேத்தியத்திற்கு பழங்கள் வைக்கலாம். அன்று மாலை விளக்கு ஏற்றி வைத்து ஆரத்தி எடுக்க வேண்டும். சுண்டல் நைவேத்தியம் செய்ய வேண்டும். கலசத்து அம்மனைத் தொட்டு சற்று நகர்த்தி விட வேண்டும். அதற்கு முன் அம்மன்பேரில் தெரிந்த பாட்டுக்களையும், சுலோகங்களையும் சொல்லலாம். இரவு படுக்குமுன் கலசத்தை எடுத்து அரிசி பாத்திரத்தில் வைக்க வேண்டும். அம்மன் இருக்கும் இடம் அக்ஷ்யமாக இருக்கும் என்பது ஐதிகம். கலசத்து தேங்காயை அதற்கடுத்த வெள்ளிக் கிழமை உடைத்து பாயசம் செய்ய வேண்டும்.<br></p>



<h3 class="wp-block-heading">வரலட்சுமி நோன்பின் மகத்துவம்<br></h3>



<p>வரலட்சுமி நோன்பின் மகத்துவத்திற்கு ஒரு புராணக் கதையும் உண்டு. முன்பொரு சமயம் சித்திர நேமி என்ற தேவகுலப்பெண் நீதிபதியாக இருந்தாள். தேவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒரு தடவை அவள் பாரபட்சமாக தீர்ப்பு வழங்கியதால், அன்னை பார்வதி அந்த சித்திர நேமியை குஷ்டரோகியாகும்படி சாபமிட்டாள். சித்திரநேமியும் தன் தவறை உணர்ந்து இந்த சாபத்திற்கு விமோசனம் பெற அன்னை பார்வதி தேவியிடம் மன்றாடினாள். மனமிறங்கிய பார்வதி தேவி சொன்னபடி வரலக்ஷ்மி நோன்பிருந்து சாபவிமோசனம் பெற்றாள். மேலும் புண்ணிய நதிகளில் நீராடுவதும் வரலட்சுமி நோன்பு இருப்பதற்கு சமமாகும். அத்துடன் குடும்பத்தில் மாமனார், மாமியாருக்கு சிறப்பான பணிவிடை செய்து வந்தாலும் வரலக்ஷ்மி நோன்பு இருந்ததின் பலன் கிடைக்கும்.<br></p>



<h3 class="wp-block-heading">வரலட்சுமி நோன்பின் பலன்<br></h3>



<p>வரலக்ஷ்மி நோன்பு இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். எட்டுவித செல்வங்களுடன் சிறப்பான வாழ்வும் அமையும். கன்னிப்பெண்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால் திருமணம் நிச்சயமாகும். வாலக்ஷ்மி பூஜை செய்யும் போது அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம். இதைச் செய்ய வசதியில்லாதவர்கள் அருகாமையில் பூஜை செய்யும் இடத்திற்கு சென்று பூஜைத் திரவியங்களை கொடுத்து, பூஜையை முடித்துக் கொண்டு சரடு கட்டிக்கொள்ள வேண்டும். பூஜையை முதல் வெள்ளிக்கிழமை செய்ய சௌகரியம் இல்லாவிடில், மறு வெள்ளிக்கிழமை செய்ய வேண்டும். ஒரு முறை செய்ய ஆரம்பித்துவிட்டால் ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும்.<br></p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/varalakshmi-nombu/">வரலட்சுமி நோன்பு பூஜை | varalakshmi nombu in tamil</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/varalakshmi-nombu/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">990</post-id>	</item>
		<item>
		<title>விநாயகர் பெருமானுக்கு உரிய விரதங்கள் மூன்று</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/vinayagar-viratham/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/vinayagar-viratham/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Oct 2022 14:38:03 +0000</pubDate>
				<category><![CDATA[விரதங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=997</guid>

					<description><![CDATA[<p>vinayagar viratham</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/vinayagar-viratham/">விநாயகர் பெருமானுக்கு உரிய விரதங்கள் மூன்று</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<h4 class="wp-block-heading">விநாயகர் பெருமானுக்கு உரிய விரதங்கள் மூன்று </h4>



<ol class="wp-block-list">
<li><strong>ஒவ்வொரு வெள்ளிக்கிழமை</strong> <strong>விரதம்</strong></li>



<li><strong>விநாயகர் சதுர்த்தி</strong> <strong>விரதம்</strong>, </li>



<li><strong>ஒவ்வொரு</strong> <strong>மாத</strong> <strong>வளர்பிறை சதுர்த்தி</strong> <strong>விரதம்</strong> ஆகும். </li>
</ol>



<h4 class="wp-block-heading"><strong>சதுர்த்தி</strong> <strong>விரதம்</strong></h4>



<p>விநாயகரை துதித்து பார்வதி தேவியே விரதம் இருந்ததாக வரலாறு தெரிவிக்கின்றன. விநாயகர் சதுர்த்திக்கு பிறகும் தொடர்ந்து விரதம் கடைபிடித்து அடுத்து வருகிற<strong> சங்கடஹ சதுர்த்தி</strong> அன்று விரதத்தை முடிக்க வேண்டும். இயலாதவர்கள் விநாயகர் சதுர்த்தியன்று ஒரு நாள் மட்டுமாவது கடைபிடிக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தியன்று களிமண் பிள்ளையாரை மா கோலமிட்ட மணைப்பலகையின் மீது வைத்து அவருக்கு பிடித்தமான எருக்கம் பூ அருகம்புல் மற்றும் இதர் பூக்களால் ஆன மாலைகளை அலங்கரித்து வஸ்திரம் உடுத்தி, ஒற்றை பூணூ இட்டு வண்ணகுடை வைத்து விநாயகர் பெருமானுக்கு பிடித்தமான அப்பம், மோதகம், கொழுக்கட்டை, பாயாசம், சுண்டல் மற்றும் பழ வகைகள் முதலியவற்றை நெய்வேத்தியங்களாக வைத்து விநாயகர் துதி சொல்லி அன்போடு ஆனை முகத்தினை நாம் துதிக்க நமக்கு பூர்ன மனநலம், உடல்நலம் வாழ்வில் சகல வளமும் கிட்டும். விக்கினங்களை எல்லாம் போக்க கூடிய விநாயகரின் பாதங்களை என்றும் தொழுவோம்.</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/vinayagar-viratham/">விநாயகர் பெருமானுக்கு உரிய விரதங்கள் மூன்று</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/vinayagar-viratham/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">997</post-id>	</item>
		<item>
		<title>சனியால் ஏற்படும் சங்கடங்கள் நீங்க புரட்டாசி சனிக்கிழமை விரதம்</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/purattasi-sani-viratham/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/purattasi-sani-viratham/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Oct 2022 02:54:27 +0000</pubDate>
				<category><![CDATA[விரதங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=1014</guid>

					<description><![CDATA[<p>புரட்டாசி சனிக்கிழமை விரதம் சிறப்பு திங்களுக்கு ஈஸ்வரன், செவ்வாய் முருகன், வியாழன் குரு, வெள்ளியன்று சக்திக்கு உகந்த தினம், சனிக் கிழமை திருமாலுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது.</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/purattasi-sani-viratham/">சனியால் ஏற்படும் சங்கடங்கள் நீங்க புரட்டாசி சனிக்கிழமை விரதம்</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<h2 class="wp-block-heading">புரட்டாசி சனிக்கிழமை விரதம் சிறப்பு<br></h2>



<p>திங்களுக்கு ஈஸ்வரன், செவ்வாய் முருகன், வியாழன் குரு, வெள்ளியன்று சக்திக்கு உகந்த தினம், சனிக் கிழமை திருமாலுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. விஷ்ணு பகவான் சனிக்கு அதிபர்.பகவான் வழிப்படுவோருக்கு எல்லாத் துன்பங்களை போக்கி நீண்ட ஆயுளை தருவார். சனியை போல் கெடுப்பவரும் இல்லை. கொடுப்பவரும் இல்லை. ஆகவே சனிக்கிழமையன்று சனிக்கு அதிபதியான . திருமாலை வணங்குவது மிகச்சிறந்தது ஆகும். ஆகவே, சூரியன் தெற்கு பக்கமாக சாய்ந்து சஞ்சரிக்கும் காலமான தட்சணாயன காலத்தில் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் திருமாலை வணங்குவது மிகவும் சிறந்தது ஆகும்.<br>மக்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து மாவிளக்கு ஏற்றி ஸ்ரீவெங்கடாஜலபதியை வணங்குதலை வழக்கமாக கொண்டுள்ளனர்</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/purattasi-sani-viratham/">சனியால் ஏற்படும் சங்கடங்கள் நீங்க புரட்டாசி சனிக்கிழமை விரதம்</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/purattasi-sani-viratham/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1014</post-id>	</item>
		<item>
		<title>கோகுலாஷ்டமி விரதம் &#124; gokulashtami viratham in tamil</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/gokulashtami-viratham-in-tamil/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/gokulashtami-viratham-in-tamil/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Oct 2022 16:26:16 +0000</pubDate>
				<category><![CDATA[விரதங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=1011</guid>

					<description><![CDATA[<p>gokulashtami viratham in tamil</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/gokulashtami-viratham-in-tamil/">கோகுலாஷ்டமி விரதம் | gokulashtami viratham in tamil</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<h3 class="wp-block-heading">கோகுலாஷ்டமி விரதம் சிறப்பு</h3>



<p>ஆவணி மாதத்தில் அஷ்டமி நாளில் வரும் கோகுலாஷ்டமியன்று விரதம் அனுஷ்டித்து, உள்ளன்புடன் நீலமேக வண்ணனாம் கண்ணபிரானின் கழல்களை பணிந்து வணங்கினால் நம் எல்லாப் பாபங்களும் பஸ்பமாகும். எழு பிறவிகளில் செய்த பாபங்கள் விலகும். நோயாலும், கவலைகளாலும் உண்டாகும் துன்பங்கள் அனைத்தும் தூளாகும். சக்கரபாணியாம் அந்த முகுந்தனின் முன்னால் மூன்றே முக்கால் நாழிகையாவது நின்று அவனுடைய திருநாமங்களைக் சொல்லித் துதித்தால் லட்சுமி கடாட்சம் பெருகும். சகல நன்மைகளும் நம்மைத் தேடி ஓடிவரும்.</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/gokulashtami-viratham-in-tamil/">கோகுலாஷ்டமி விரதம் | gokulashtami viratham in tamil</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/gokulashtami-viratham-in-tamil/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1011</post-id>	</item>
		<item>
		<title>கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கும் முறை</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/kethara-gowri-viratham/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/kethara-gowri-viratham/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Oct 2022 15:56:27 +0000</pubDate>
				<category><![CDATA[விரதங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=1030</guid>

					<description><![CDATA[<p>கேதார கௌரி விரதம் கேதாரேசுவரரான சிவபெருமானைக் குறிந்து, பிராட்டியார் விரதம் அனுஷ்டித்ததால் இந்த விரதத்திற்கு கேதார கௌரீ விரதம் என்று பெயர் ஏற்பட்டது. சிலனும் சக்தியும் ஒன்றென்ற</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/kethara-gowri-viratham/">கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கும் முறை</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<h3 class="wp-block-heading">கேதார கௌரி விரதம்</h3>



<p>கேதாரேசுவரரான சிவபெருமானைக் குறிந்து, பிராட்டியார் விரதம் அனுஷ்டித்ததால் இந்த விரதத்திற்கு கேதார கௌரீ விரதம் என்று பெயர் ஏற்பட்டது. சிலனும் சக்தியும் ஒன்றென்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் ஓர் ஒப்பற்ற விரதம்தான் இந்த கேதார கௌரி விரதம், புரட்டாசி மாதம் சுக்ல பட்ச தசமியன்று தொடங்கி ஐப்பசி மாதம் கிருஷ்ண பக்ஷ்ம் தீபாவளிஅமாவாசை வரை விரதமிருந்து முடிக்க வேண்டிய பண்டிகை இது. இவ்விரதம் தோன்றியதற்கான புராண வரலாற்றை காண்போம்.<br></p>



<h3 class="wp-block-heading">கேதார கௌரி விரதம் வரலாறு</h3>



<p>பிருங்கி முனிவர் என்பவர் பெரும் சிவபக்தர். இவர் சிவனைத் தவிர வேறு எத்தெய்வத்தையும் சிந்தையிற் கொள்வதில்லை, தியானிப்பதுமில்லை. இவர் சக்தியைக் கூடத் தொழுவதில்லை. முனிவரின் செயலைக் கண்ட சங்கரி சினங்கொண்டாள். அம்பிகையின் கோபாக்கினிக்குப் பலியான முனிவர் கால்களின் சக்தியை இழந்தார். “இனிமேல் சிவனை வணங்குவோர் தம்மையும் சேர்த்து வணங்க வேண்டும். தான் வேறு சிவன் வேறு அல்ல, சிவனும் தானும் ஒன்றே&#8221; என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்தத் திருவுள்ளம் கொண்டாள்.<br>அம்பிகை அரனார் அடிமலர் தொழுது கயிலையை விட்டகன்றாள். கௌரிதேவி, கௌதம முனிவருடைய தபோவனத்தை வந்தடைந்தாள். கௌரிதேவியை கௌதமர் வணங்கி வரவேற்றார். கௌதமரின் பக்திக்கு திருவுள்ளம் கனிந்த கௌரி, பிருங்கி முனிவரால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைப் பற்றி கூறினாள். கௌதமமுனிவர், கௌரி தேவிக்கு அரிய விரதம் ஒன்றை அனுஷ்டிக்குமாறு வேண்டிக்கொண்டார். அந்த விரத மகிமையால் தேவியின் எண்ணம் ஈடேறும் என்று கூறினார். அனுஷ்டான விதிமுறைகளையும் விளக்கிச் சொன்னார், கௌரி, முனிவர் சொன்ன பிரகாரம் விரதத்தை அனுஷ்டிக்கத் தொடங்கினாள்.<br>விரதம் பூர்த்தி அடைந்த நந்நாளன்று, நாள் மறை போற்றும் நாயகன் &#8211; வேத முதல்வன், விமலர் கௌரியின் முன்னால் உடம்பின் இட பாகத்தைத் தேவிக்குத் தந்தார் ஈசன்! சூலமும் மழுவும் தாங்கப் பெற்ற திருக்கரத்துடன் காட்சி அளித்தார். பகவானின் பாதங்களைப் பணிந்து தொழுது பொன்வண்ண மலர்களால் அர்ச்சித்தாள்.<br>பார்வதி தேவி, இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் போது சித்ராங்கதன் என்னும் கந்தர்வன் தேவியிடம், “தேவி! பூவுலகம் தோறும் இந்த விரதத்தை மக்கள் அனுஷ்டித்து சர்வ மங்கலங்களையும் பெறுவதற்கு அருள் பாலிக்க வேண்டும்&#8221; என்று பிரார்த்தித்தான், பார்வதி தேவியும் அவ்வாறே அருள் செய்தாள். இதுபோல் இவ்விரத வரலாறுகளைப் பற்றிய விளக்கங்களைச் சொல்லும் பல புராணக் கதைகள் உள்ளன.</p>



<h5 class="wp-block-heading"><strong>அர்த்தநாரீசுவரர்</strong><br></h5>



<p>விரதத்தின் மகிமையால், கௌரியின் விருப்பம்போல் தனது உடம்பின் இட பாகத்தைத் தேவிக்குந் தந்தார் ஈசன்! அதுவே அர்த்தநாரீசுவரர் என்னும் சிவசக்தி சொரூபத்தின் அருள் வடிவமான திருத்தோற்றம்.<br></p>



<h2 class="wp-block-heading">கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கும் முறை<br></h2>



<p>முதலில் பூரண பொற்கும்ப கலசம் வைத்து எம்பெருமானை ஆவாஹனம் செய்யவேண்டும். பிறகு இருபத்தொரு இழையையுடைய நூலை ஒன்றாக முறுக்கி கொள்ளவேண்டும். தினமும் பூரணகும்ப பூஜையின் போது நூலில் முடிசு ஒன்று போட வேண்டும். இவ்வாறு இருபத்தோரு நாள் பூஜை புரிந்து இருபத்தோரு முடிச்சுகளைப் போடவேண்டும். இருபத்தோராவது நாள் தீபாவளி வரும். அன்றைய தினம் இருபத்தோராவது முடிபோட்டு நூலை காப்பாகக் கட்டி, விரதத்தைப் பூர்த்தி செய்யவேண்டும். கலசத்தைப் பூஜிப்பது போல அம்மியையும், குழவியையும் அலங்கரித்து, அம்மி மீது குழலியை நிற்கும்படி செய்து ஆவுடை மீது லிங்கம் இருப்பது போல காட்சி தரும் சிவலிங்க மூர்த்தியை நிறுவ வேண்டும். அதன் மீது கேதாரீஸ்வரரை ஆவாஹனம் செய்து பூஜையை மேற்கொண்டு பூர்த்தி செய்ய வேண்டும்.</p>



<p>இருபத்தொரு நாட்கள் விரதத்தை அனுஷ்டிக்க இயலாதவர்கள் இறுதி நாளன்று மட்டும் இவ்விரதத்தை மேற்கொள்ளலாம். இருபத்தோரு பழங்கள் &#8211; பக்ஷணங்கள் செய்து எம்பெருமானுக்கு நிவேதித்து, வில்வத்தால் அர்ச்சித்து தூப்ப தீப நெய்வேத்தியங்கள் செய்ய வேண்டும். தீபங்களால் ஆராதித்து இருபத்தோரு பேருக்கு அமுதமளித்து இந்த விரதத்தைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.</p>



<h4 class="wp-block-heading"><strong>கேதார கௌரி விரதம் பலன்</strong><br></h4>



<p>இவ்விரதத்தை ஆண்டுதோறும் அனுஷ்டிப்பதால் கணவன் மனைவி இருவரிடையே ஒற்றுமையும், குதூகலமும், க்ஷேமங்களும் உண்டாகும்.</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/kethara-gowri-viratham/">கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கும் முறை</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/kethara-gowri-viratham/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1030</post-id>	</item>
		<item>
		<title>முருகனுக்குரிய விரதங்கள் &#124; murugan virutham in tamil</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/murugan-virutham/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/murugan-virutham/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Sun, 09 Oct 2022 08:47:20 +0000</pubDate>
				<category><![CDATA[விரதங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=1040</guid>

					<description><![CDATA[<p>முருகனுக்குரிய விரதங்கள் மூன்று 1.வார விரதம் &#8211; 2.நக்ஷத்ர விரதம் &#8211; 3.திதி விரதம், வார விரதம் ஒவ்வொரு வாரத்திலும் வெள்ளிக்கிழமை தோறும் விரதமிருந்து வேலவனின் தாள்</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/murugan-virutham/">முருகனுக்குரிய விரதங்கள் | murugan virutham in tamil</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<h2 class="wp-block-heading">முருகனுக்குரிய விரதங்கள் மூன்று <br></h2>



<p>1.வார விரதம் &#8211; 2.நக்ஷத்ர விரதம் &#8211; 3.திதி விரதம்,</p>



<h4 class="wp-block-heading"><strong>வார விரதம்</strong><br></h4>



<p>ஒவ்வொரு வாரத்திலும் வெள்ளிக்கிழமை தோறும் விரதமிருந்து வேலவனின் தாள் பணிவது வார விரதம்.<br></p>



<h4 class="wp-block-heading"><strong>நக்ஷத்ர விரதம்</strong><br></h4>



<p>ஒவ்வொரு மாதத்திலும் கார்த்திகை (கிருத்திகை) நட்சத்திரத்தில் கந்தவேலைப் போற்றி துதித்து விரதமிருப்பது நட்சத்திர விரதம்.<br></p>



<h4 class="wp-block-heading"><strong>திதி விரதம்</strong><br></h4>



<p>கந்த சஷ்டி விரதம் (சஷ்டிதிதியில்)</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/murugan-virutham/">முருகனுக்குரிய விரதங்கள் | murugan virutham in tamil</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/murugan-virutham/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1040</post-id>	</item>
		<item>
		<title>கந்த சஷ்டி விரதம் முறை &#124; kanda sashti viratham</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/kanda-sashti-viratham/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/kanda-sashti-viratham/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Oct 2022 14:02:57 +0000</pubDate>
				<category><![CDATA[விரதங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=1042</guid>

					<description><![CDATA[<p>kanda sashti viratham</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/kanda-sashti-viratham/">கந்த சஷ்டி விரதம் முறை | kanda sashti viratham</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<h2 class="wp-block-heading">கந்த சஷ்டி விரதம் சிறப்பு<br></h2>



<p>ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ வளர்பிறையில் சஷ்டிதிதியில் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது முருகப் பெருமானுக்காக கொண்டாடப்படும் விரதங்களுள் முதன்மையான சிறப்புடன் விளங்குகிறது. கந்த சஷ்டி விரதத்தை முறைப்படி அனுஷ்டிப்போர் மற்ற எல்லா விரதங்களையும் கொண்டாடிய பலனைப் பெறுவர்.<br>                        இந்த சஷ்டி விரதம் ஆறு நாட்கள் கொண்டாடப்படுகின்றன. ஆறு நாட்களும் விரதமிருப்போர் பூரண உபவாசம் இருந்து இந்த விரதத்தைக் கொண்டாட வேண்டும். அவ்வாறு இருப்பதற்கு இயலாதவர்கள், முதல் ஐந்து நாட்கள் பால், பழம் உட்கொள்ளனம். ஆறாவது நாளான சஷ்டி தினத்தன்று மட்டுமாவது கண்டிப்பாக பூரண உபவாசம் இருத்தல் வேண்டும்.<br>கந்தசஷ்டி விரதத்தை ஆண்டுதோறும் அனுஷ்டிக்க இயலாதவர்கள் ஆறு ஆண்டுகளாவது தொடர்ந்து அனுஷ்டிப்பது உத்தமம். கந்தசஷ்டி ஆறு தினங்களில் ஒரு நாள் மௌனவிரதம் இருப்பது சிறந்தது, மன வலிமை தரும்.</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/kanda-sashti-viratham/">கந்த சஷ்டி விரதம் முறை | kanda sashti viratham</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/kanda-sashti-viratham/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1042</post-id>	</item>
		<item>
		<title>கார்த்திகை சோமவாரம் விரதம்&#124; somavaram vratham</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/karthigai-somavaram-vratham/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/karthigai-somavaram-vratham/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Oct 2022 13:37:35 +0000</pubDate>
				<category><![CDATA[விரதங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=1048</guid>

					<description><![CDATA[<p>karthigai somavaram vratham</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/karthigai-somavaram-vratham/">கார்த்திகை சோமவாரம் விரதம்| somavaram vratham</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<h2 class="wp-block-heading">கார்த்திகை சோமவாரம்  விரதம்</h2>



<p>திங்கட்கிழமை சோமவாரம் எனப்படும். ஆகவே சோமவார விரதம் என பெயர் பெற்றது. இவ்விரதத்தை போல சிவபெருமானுக்கு பிரீதியான விரதம் வேறொன்றும் இல்லை. அதிலும் கார்த்திகை மாத சோமவாரம் மிகவும் சிறந்ததாகும்</p>



<h4 class="wp-block-heading">கார்த்திகை சோமவாரம் வரலாறு</h4>



<p>முன்னொரு காலத்தில் சந்திரன் சிவபெருமானை பிரார்த்தித்து முறையாக சோமவார விரதம் இருந்து எம்பெருமானின் சடாபாரத்தில் (திருசடாமுடியாக) வீற்றிருக்கும் பாக்கியம் பெற்றார். இதைக்கண்ட பார்வதி தேவி சிவபெருமானிடம் சோமவார விரத முறையை அருள விண்ணப்பித்தல். எம்பெருமான் சோமவார தினத்தில் உபவாசம் இருந்து சிவநாமங்களை ஜபித்து இயன்றவரை தான தருமங்கள் செய்து நற்குணம் அமைந்த வேதியனையும், அவன் மனைவியையும் அழைத்து அவர்களையே சிவனாகவும், உமையாகவும் பாவித்து விருந்து உபசரித்து தான தருமங்கள் செய்ய என்று கூறினார்.<br>இந்த விரதத்தை வசிஷ்டர், சேமசன்மர், தன்மமிதியர் போன்றோர் அனுஷ்டித்து பெருஞ்செல்வம், நற்கதி, புத்திரபேறு போன்றவற்றை அடைந்து இனிது வாழ்ந்தனர். சிவபெருமானுக்குரிய விசேஷ நாளாகிய இந்தாளில் விரதம் இருந்து பல பேறுகளை அடைந்து வாழ்வோமாக.<br></p>



<h3 class="wp-block-heading">சிவாலயதில் சோமவாரம்<br></h3>



<p>கார்த்திகை சோமவார தினத்தில் அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு திருமஞ்சனமும், சங்காபிஷேகமும், இடப வாகனத்தில் வீதியுலா உற்சவமும் நடைபெறும். இத்தினத்தில் சிவாலயம் சென்று வழிபடுதல் மிகவும் சிறந்ததாகும். இந்த மாதத்தில் வரும் நான்கு சோமவார தினத்தில் அவசியம் சிவாலயம் சென்று வழிபட வேண்டும். கார்த்திகை மாதத்தில் ஐந்து சோமவாரம் வருமேயானால் ஐந்தாவது சோமவாரம் சிவபெருமானை வழிபட மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/karthigai-somavaram-vratham/">கார்த்திகை சோமவாரம் விரதம்| somavaram vratham</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/karthigai-somavaram-vratham/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1048</post-id>	</item>
		<item>
		<title>உமாமகேஸ்வர விரதம் &#124; uma maheswara viratham in tamil</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/uma-maheswara-viratham-in-tamil/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/uma-maheswara-viratham-in-tamil/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Oct 2022 13:26:43 +0000</pubDate>
				<category><![CDATA[விரதங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=1050</guid>

					<description><![CDATA[<p>uma maheswara viratham in tamil</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/uma-maheswara-viratham-in-tamil/">உமாமகேஸ்வர விரதம் | uma maheswara viratham in tamil</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<h2 class="wp-block-heading">உமாமகேஸ்வர விரதம்</h2>



<p>இவ்விரதம் கார்த்திகை மாதப் பௌர்னமி தினத்தில் அனுஷ்டிக்கப்படுவது. உமாமகேச்சுர மூர்த்தம் மிகவும் மேலான மூரித்தமாகும். இருபத்தைத்து விக்கிரக பேதமாகிக் கிருந்திய பேதங்களுள் ஒன்றாகியும் உமையோடு கூடிய மூர்த்தமாகும்.<br></p>



<h3 class="wp-block-heading">உமாமகேஸ்வர விரத முறை<br></h3>



<p>நித்திய கருமங்களை முடித்துக் குறிப்பிட்ட ஓர் இடத்தைச் சுத்தம் செய்து கும்பம் வைத்துப் பொன்னாலேனும், வெள்ளியாலேனும் செய்த உமை, சிவன் திருவருவங்களை (மூர்த்த பிம்பங்களைப் பஞ்சகவ்வியத்தினால் அபிஷேகம் செய்து, புதிய வஸ்திரமசணிவித்து திருவமுது படைத்துத் தீபதூபம் காட்டி, மனமுருக வணங்குதல் வேண்டும். பின்னர்ச் சிவாலயமடைந்து, தன் மனதில் கருதிய ஒரு பொருளை விரும்பித் தோத்திரம் செய்து, ஒரு பொழுதுண்ணால் வேண்டும். மறுநாள் உதயத்தில் முன்னாள் ஸ்தாபித்த கும்பத்தையும் பிம்பத்தையும் முன்போல வாங்கி, அந்தணருக்கு அவற்றைத் தானமாகக் கொடுத்து, அடியார்களுடன் திருவமுது செய்தல் வேண்டும். வருடந்தோறும் இந்த நோன்பியற்றுவோர் இம்மையில் சகல செல்வங்களும் பொருந்தப்பெற்று மறுமையில் முக்தியுமடைவர்.<br></p>



<h3 class="wp-block-heading">உமாமகேஸ்வர விரத பயன்<br></h3>



<p>திருணபிந்து என்றொரு முனிவர் கண்பார்வை குன்றி நீண்ட காலம் வருந்தினார். இவ்விரத மகிமையை அறிந்து அனுஷ்டித்துப் பார்வை பெற்றார். கிருஷ்ணன் பதினாறாயிரம் தேவியரை அடைந்து; ஒன்பது கோடி பேரைப் பெற்று உலகாண்டு சிறப்புற்றான். பிரம்மன் காயத்திரி, சரசுவதி, சாவித்திரி இவர்களை மனைவிமாராகப் பெற்றுச் சிறப்படைந்தான், இந்திரன், சயந்தனை மகனாகப் பெற்றான். வசிட்டர் தெய்வீகமுடைய காமதேனுவைப் பெற்று உயர்வடைந்தார். மிதிலையரசன் சீதையைப் புத்திரியாகப் பெற்றான். சித்திரசேனன் என்றொருவன் ஊர்வசியை மனையாளாகப் பெற்றான். சுதன்மா என்றொரு வேதியன், தான் படித்தறிய வேண்டிய வேதபாராயணத்தில் மனமின்றி நெடுநாள் வீனோ கழித்தனன். இவ்விரத முறையைக் கேள்வியுற்று அனுஷ்டித்தான். அதனால் அருங்கலை வல்லவனானான். இந்துசேனன் என்றொரு மன்னன் பகைவர்க்குத் தோற்றுக் காட்டையடைந்து, காய்கனிகளை புசித்து காலம் கழித்தான். அகத்திய முனிவர் அவ்வனத்தை அடைந்தபோது தன் குறைகளை முறையிட்டான். அவர் இவ்விரதமுறையை அவனுக்குரைத்து அனுஷ்டிக்கும்படி கூறினார். அதனை அவன் அனுஷ்டித்தான். சிவபெருமான் குபேரன் மூலம் அவனுக்கு வேண்டிய யாவையும் அருளினார். அவ்விந்துசேனன் பகைவரைப் புறங்கண்டு, நீண்ட காலம் ஆட்சிபுரிந்து விண்ணுலகடைந்தான்.</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/uma-maheswara-viratham-in-tamil/">உமாமகேஸ்வர விரதம் | uma maheswara viratham in tamil</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/uma-maheswara-viratham-in-tamil/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1050</post-id>	</item>
		<item>
		<title>வைகுண்ட ஏகாதசி விரத முறை &#8211; ஏகாதசி விரத சிறப்பு</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/vaikunta-ekadasi-tamil/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/vaikunta-ekadasi-tamil/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Oct 2022 04:45:16 +0000</pubDate>
				<category><![CDATA[விரதங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=1058</guid>

					<description><![CDATA[<p>வைகுண்ட ஏகாதசி விரத சிறப்பு மார்கழி மாதம் வருகின்ற வைகுண்ட ஏகாதசியும் விசேஷ பலனைத் தரும் அரியதோர் விரதமாக அமைந்துள்ளது இம்மங்கல நாளன்று முழு உபவாசமிருந்து வைகுண்ட</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/vaikunta-ekadasi-tamil/">வைகுண்ட ஏகாதசி விரத முறை &#8211; ஏகாதசி விரத சிறப்பு</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<h3 class="wp-block-heading">வைகுண்ட ஏகாதசி விரத சிறப்பு</h3>



<p><br>மார்கழி மாதம் வருகின்ற வைகுண்ட ஏகாதசியும் விசேஷ பலனைத் தரும் அரியதோர் விரதமாக அமைந்துள்ளது இம்மங்கல நாளன்று முழு உபவாசமிருந்து வைகுண்ட நாதனின் சேவடி கமலங்களைத் துதிக்க வேண்டும். நமது பக்திக்கு ப்ரீதியான பக்த பராதீனனான ஸ்ரீமத் நாராயணன் நமக் வைகுண்ட வாசத்தை கடாக்ஷித்து கிருபை செய்கிறார். மூன்று கோடி ஏகாதசிகளை அனுஷ்டித் பலன்களைப் பெறும் பாக்கியத்தை அருளுகிறார் அனந்தன்! எனவே வைகுண்ட ஏகாதசி &#8220;&#8221;முக்கோடி ஏகாதசி&#8221; என்றும் கூறுவர். இது 3 கோடி ஏகாதசிக்கு சமமாகும். அன்று வைணவ கோவில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும். சொர்க்க வாசல் திறப்பது என ஐதிகம்.</p>



<h4 class="wp-block-heading">வைகுண்ட ஏகாதசி விரதம் முறை</h4>



<p><br>துயிலெழுந்து ஜப தபங்களை முடித்து அன்றைய தினம் முழுவதும் பூரண உபவாசம் அனுஷ்டிக்க வேண்டும்.<br>இரவெல்லாம் கண்விழித்து புராண நூல்களைப் படிப்பதும் பகவான் நாமாக்களைச் சொல்வதுமாக இருக்க வேண்டும். மறுநாள் குளித்து முன்போல் ஜபங்களை முடித்து, ஓம் நமோ நாராயணா&#8221; என்று சொல்லியவாறு துளசி தீர்த்தத்தை உள்ளுக்குள் பருகவேண்டும்.</p>



<h4 class="wp-block-heading">துவாதசி<br></h4>



<p>ஏகாதசிக்கு மறு தினத்தை துவாதசி என்பர். துவாதசியன்று உணவு அருந்துவதை பாணை&#8221; என்று கூறுவர்</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/vaikunta-ekadasi-tamil/">வைகுண்ட ஏகாதசி விரத முறை &#8211; ஏகாதசி விரத சிறப்பு</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/vaikunta-ekadasi-tamil/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1058</post-id>	</item>
		<item>
		<title>ஏகாதசி விரத சிறப்பு &#8211; ஏகாதசி விரதம் இருக்கும் முறை</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/yegathasi-viratham-murai/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/yegathasi-viratham-murai/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Oct 2022 04:22:26 +0000</pubDate>
				<category><![CDATA[விரதங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=1056</guid>

					<description><![CDATA[<p>ஏகாதசி விரதம் ஏகாதசி என்பது வளர்பிறை தேய்பிறைகளின் பதினோராம் நாள், இவ்விரதம் காத்தல் கடவுளாகிய விஷ்ணுமூர்த்தியைக் குறித்து அனுஷ்டிக்கப்படுவது. இது நித்தியம். காமியம் என இருவகைப்படும். நித்தியம்,</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/yegathasi-viratham-murai/">ஏகாதசி விரத சிறப்பு &#8211; ஏகாதசி விரதம் இருக்கும் முறை</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<h3 class="wp-block-heading">ஏகாதசி விரதம்</h3>



<p>ஏகாதசி என்பது வளர்பிறை தேய்பிறைகளின் பதினோராம் நாள், இவ்விரதம் காத்தல் கடவுளாகிய விஷ்ணுமூர்த்தியைக் குறித்து அனுஷ்டிக்கப்படுவது. இது நித்தியம். காமியம் என இருவகைப்படும். நித்தியம், நிலையான முக்தியை விரும்பி அனுஷ்டிக்கப்படுவது. காமியம், நிலையான இம்மைப் பயன்களை விரும்பி அனுஷ்டிக்கப்படுவது. ஏகாதசி, சிவபிரானுக்குரிய திதியாகும். துவதசி திருமாலுக்குரிய திதியாகும். இவ்வீரண்டு திதிகளும் பொருந்திவரும் விரதமாதலின் சைவர்கள் வைஷ்ணவர்கள் யாவரும் இதனை அனுஷ்டிப்பர். </p>



<h4 class="wp-block-heading">ஏகாதசி விரதம் எப்படி இருக்க வேண்டும் ?</h4>



<p>ஒரு வருடத்தில் வரும் ஏகாதசி நாட்கள் இருபத்துநான்கு. இவற்றுள் பூர்வ பட்சத்தில் வரும் பன்னிரண்டு ஏகாதசி திதிகளிலே இவ்விரதம் அனுஷ்டிக்கப்படல் வேண்டும்.</p>



<p>இவ்விரதத்தைக் கார்த்திகை மாதம் பூர்வபட்ச ஏகாதசியை முதலாகக் கொண்டு அனுஷ்டித்தல் வேண்டும் என்பர். ஏனெனில், இம்மாதத்தில்தான் மகாவிஷ்ணுமூர்த்தி ஆடி முதல் கார்த்திகை முடியவுள்ள ஐந்து மாதங்களில் நெடுந்துயில் கொள்ளுதலின் இவ்வைந்து மாதங்களில் நிகழும் ஏகாதசிகள் சிறந்தனவெனவும் கூறுவர். இக்காலத்து இவ்விரதம் மார்கழி மாதப் பூர்வப்பட்ச ஏகாதசியை முதலாகக் கொண்டும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.</p>



<h4 class="wp-block-heading">ஏகாதசி விரத சிறப்பு</h4>



<p>மார்கழி மாதம் சுக்ல பக்ஷம் பதினோறாம் நாளன்று வைகுண்ட ஏகாதசி தினம் கொண்டாடப் படுகிறது. மந்திரத்துக்கு காயத்ரி தெய்வத்துக்கு தாய் தீர்த்தத்திற்கு காசி &#8211; முக்திக்கு காஞ்சி &#8211; விரதத்துக்கு ஏகாதசி என்பது ஆன்றோர்களின் அருள்வாக்கு அந்த அளவிற்கு ஏகாதசி விரதமானது பக்தியிலும் புண்ணியத்திலும் உவர்ந்து சிறந்து விளங்குகிறது. மொத்தம் ஒரு ஆண்டுக்கு இருபத்தைந்து ஏகாதசிகள் வருகின்றன. ஒரு மாதத்திற்கு இரு ஏகாதசிகள், சுக்ல பக்ஷத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியும் சேர்த்து இருபத்தைந்தாக கணக்கிடுகின்றனர்.</p>



<p><strong>தை </strong>&#8211; பைலை , புத்ரா<br><strong>மாசி</strong> &#8211; ஷட்திலா , ஐயர்<br><strong>பங்குனி</strong> &#8211; விமலா , ஆமலகா<br><strong>சித்திரை</strong> &#8211; பாபமோஹினி , காமதா<br><strong>வைகாசி</strong> &#8211; வருதினி , மோஹினி<br><strong>ஆனி</strong> &#8211; அபரா , நிர்கிலா<br><strong>ஆடி</strong> &#8211; யோகினி , சயினி<br><strong>ஆவணி</strong> &#8211; காமிகை , புத்திரதா<br><strong>புட்டாசி</strong> &#8211; அஜா , பத்மநாபா<br><strong>ஐப்பசி</strong> &#8211; இந்திரா , பாபங்குசா<br><strong>கார்த்திகை</strong> &#8211; ரமாபிரம , போதினி<br><strong>மார்கழி</strong> &#8211; மோ , உத்பத்தி</p>



<p>-இருபத்தைந்தாவது ஏகாதசி <strong>&#8220;கமலா&#8221;</strong></p>



<h4 class="wp-block-heading">ஏகாதசி விரத பயன்<br></h4>



<p>இவ்விரத மகிமையால் நாம் செய்த பாபங்கள் அனைத்தும் நிவர்த்தியாகிறது. இந்த ஏகாதசி விரதங்களையும் பக்தி சிரத்தையுடன் அனுஷ்டிப்பது ஆரோக்கிய ஐசுவரிய சகல சம்பத்தும் எளிதில் சித்தி பெறுவதற்கு ஏற்ற சக்தியைத் தரும் மார்க்கங்களாக விளங்குகின்றன. ஆனி மாதம் வருகின்ற நீர்கிலா ஏகாதசியில் விரதம் அனுஷ்டிப்பதால், மற்ற எல்லா விரதங்களையும் அனுஷ்டித்த பலனைப் பெறுகிறோம்.</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/yegathasi-viratham-murai/">ஏகாதசி விரத சிறப்பு &#8211; ஏகாதசி விரதம் இருக்கும் முறை</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/yegathasi-viratham-murai/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1056</post-id>	</item>
		<item>
		<title>காரடையான் நோன்பு &#124; karadaiyan nombu</title>
		<link>https://thevaramthiruvasagam.com/blog/karadaiyan-nombu/</link>
					<comments>https://thevaramthiruvasagam.com/blog/karadaiyan-nombu/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[saran110080]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Oct 2022 13:48:50 +0000</pubDate>
				<category><![CDATA[விரதங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://thevaramthiruvasagam.com/blog/?p=1094</guid>

					<description><![CDATA[<p>காரடையான் நோன்பு என்றால் என்ன ? இதை சாவித்ரி நோன்பு என்றும் இந்நோன்பு கணவனின் குறித்து செய்யப்படுவதாகும். இதை மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் வரும்</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/karadaiyan-nombu/">காரடையான் நோன்பு | karadaiyan nombu</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<h3 class="wp-block-heading"><strong>காரடையான் நோன்பு என்றால் என்ன ?</strong></h3>



<p>இதை சாவித்ரி நோன்பு என்றும் இந்நோன்பு கணவனின் குறித்து செய்யப்படுவதாகும்.  இதை மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் வரும் சமயம் நோற்க வேண்டும். “பாசிக் கயிறு பாசி படியும்&#8221; என்று இம்மாதம் புதிய திருமாங்கல்ய சாடு மாற்றிக் கட்டிக் கொண்டால் மிகவும் விசேஷம்,<br></p>



<h4 class="wp-block-heading"><strong>காரடையான் நோன்பு கதை</strong></h4>



<p>சாவித்ரி யமதர்ம ராஜனிடமிருந்து தன் கணவன் உயிரை மீட்டது இந்த தினத்தில்தான் என்று கூறுவார்கள்.</p>



<h4 class="wp-block-heading"><strong>காரடையான் நோன்பு விரத முறை</strong><br></h4>



<p>வீட்டைப் பெருக்கி மெழுகி; மாக்கோலம் இட்டு செம்மண் இட வேண்டும். மாதம் பிறக்கும் சமயம்தான் நோன்பு நோற்க வேண்டும். நோன்பு செய்யும் வரை உபவாசம் இருந்து சாப்பிட வேண்டும். பூஜைக்கு காமாக்ஷி அம்மனின் படத்தை வைத்து, ஒரு கொத்து மாவிலையை சொருகி. தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம், நோன்பு அடை, வெண்ணெய் வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும். நோன்பு சரட்டில் &#8216;புஷ்பந்தைக் கட்டி படத்திற்கு சார்த்திவிட்டு கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும்.</p>
<p>The post <a href="https://thevaramthiruvasagam.com/blog/karadaiyan-nombu/">காரடையான் நோன்பு | karadaiyan nombu</a> appeared first on <a href="https://thevaramthiruvasagam.com/blog">Hindu Tamil Devotional Songs Lyrics Tamil | thevaramthiruvasagam.com</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://thevaramthiruvasagam.com/blog/karadaiyan-nombu/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1094</post-id>	</item>
	</channel>
</rss>
