அம்மன் பாடல்கள்பக்தி பாடல்கள்

அங்காளம்மா எங்கள் செங்காளம்மா பாடல் வரிகள் | Angalamma Song Lyrics in Tamil

அங்காளம்மா எங்கள் செங்காளம்மா என்ற அங்காளம்மன் பஜனை பாடல்களை பாடி கேட்டு மகிழ்ந்து அம்மன் அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அங்காளம்மா எங்கள் செங்காளம்மா பாடல் வரிகள் – Angalamma Song Lyrics in Tamil

அங்காளம்மா எங்கள் செங்காளம்மா
அங்காளம்மா எங்கள் செங்காளம்மா
மங்களம் பொங்கிட மனதில் வந்திடும்
மாரியம்மா கருமாரியம்மா கருமாரியம்மா !!!! 1

சிங்காரி ஒய்யாரி செம்பவளக் கருமாரி
சிங்கத்தின் மீதேறி பவனி வரும் ஓங்காரி
சிங்காரி ஒய்யாரி செம்பவளக் கருமாரி
சிங்கத்தின் மீதேறி பவனி வரும் ஓங்காரி…., 2

மஞ்சளிலே நீராடி நெஞ்கினிலே உறவாடி
மஞ்சளிலே நீராடி நெஞ்கினிலே உறவாடி
தஞ்சமென்று வந்தோமடி கெஞ்சுகிறோம் உன்னையடி …., 3

அங்காளம்மா எங்கள் செங்காளம்மா
அங்காளம்மா எங்கள் செங்காளம்மா
மங்களம் பொங்கிட மனதில் வந்திடும்
மாரியம்மா கருமாரியம்மா கருமாரியம்மா !!!! 4

நாகத்தில் மீதமர்ந்து
காட்சி தரும் அலங்காரம்
நாயகியே உன்னைக் கண்டால்
நாவில் வரும் ஓங்காரம் …., 5

பாசமெனும் மலரெடுத்து
ஆசையுடன் மாலை தொடுத்து
நேசமுடன் சூட்ட வந்தோம்
மாசில்லாத மாரியம்மா …., 6

அங்காளம்மா எங்கள் செங்காளம்மா
அங்காளம்மா எங்கள் செங்காளம்மா
மங்களம் பொங்கிட மனதில் வந்திடும்
மாரியம்மா கருமாரியம்மா கருமாரியம்மா !!!! 7

தென் பொதிகை சந்தனம் எடுத்து
மஞ்சளுடன் குங்குமம் சேர்த்து
பன்னீரும் அபிஷேகம்
செய்ய வந்தோம் மாரியம்மா …., 8

அன்னையாக நீ இருந்து
அருளென்னும் பாலைத் தந்து
இன்பமுடன் வாழ வைப்பாய்
ஈஸ்வரியே மாரியம்மா …., 9

அங்காளம்மா எங்கள் செங்காளம்மா
அங்காளம்மா எங்கள் செங்காளம்மா
மங்களம் பொங்கிட மனதில் வந்திடும்
மாரியம்மா கருமாரியம்மா கருமாரியம்மா !!!! 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *