அம்மன் பாடல்கள்பக்தி பாடல்கள்

செல்லாத்தா செல்ல மாரியாத்தா பாடல் வரிகள் | Chellatha Chella Mariatha Lyrics in Tamil

செல்லாத்தா செல்ல மாரியாத்தா என்ற அம்மன் பஜனை பாடல்களை கேட்டு பாடி மகிழ்ந்து அம்மன் அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் 

செல்லாத்தா செல்ல மாரியாத்தா பாடல் வரிகள்

செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா

செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா

கண்ணாத்தா உன்னைக் காணாட்டா
இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா

செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா

தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிகிட்டு
தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிகிட்டு ……
தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா – நாங்கள்
தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா

நீ இளநீர எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு
இளநீர எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு
வளமான வாழ்வு கொடு மாரியாத்தா
நல்ல வழி தன்னையே காட்டிவிடு மாரியாத்தா

செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா

பசும்பால கறந்துகிட்டு கறந்தபால எடுத்துகிட்டு
புற்றினிலே ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நாங்கள் பக்தியுடன் ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நீ பாம்பாக மாறி அதை பாங்காக குடித்துவிட்டு
தானாக ஆடிவா நீ மாரியாத்தா

உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா

செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா

ஆதி சக்தி மாதா கருமாரி மாதா !!!!!
எங்கள் ஆதி சக்தி மாதா கருமாரி மாதா !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *