அம்மன் பாடல்கள்பக்தி பாடல்கள்

கலைவாணி நின் கருணை பாடல் வரிகள் – Kalaivani nin karunai lyrics tamil

கலைவாணி நின் கருணை என்ற அம்மன் பஜனை பாடல்களை கேட்டு பாடி மகிழ்ந்து அம்மன் அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கலைவாணி நின் கருணை பாடல் வரிகள்

கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே

கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே

அலங்கார தேவதையே வனிதாமணி
இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி!
கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே

மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்
மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்

அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்
அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்

ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்
ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்

சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்!
சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்!

கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே

வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்
வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்

வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம்
வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம்

வானகம் வையகம் உன் புகழ் பாடும்
வானகம் வையகம் உன் புகழ் பாடும்

வேண்டினேன் உன்னைப் பாட தருவாய் சங்கீதம்

கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே

அலங்கார தேவதையே வனிதாமணி
இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி!

கலைவாணி நின் கருணை தேன்மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *